இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எங்களில் ஒருவர் அவர் இலங்கைக்கு விஜயம் செய்தமை எமக்கு கிடைத்த பெருமையாகும் என்று புத்த சாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று ஆரம்பமான சர்வதேச வெசாக் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார். இங்கு அமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இந்த நிகழ்வை இலங்கையில் நடத்தக் கிடைத்தமையையிட்டு மகிழ்ச்சி அடைகின்றோம். புத்தரின் பிறப்பு, ஞானமடைதல், மற்றும் இறப்பு ஆகியன இடம்பெற்ற மிகமுக்கிய தினமாக வெசாக் தினம் காணப்படுகின்றது.
2030 ஆம் ஆண்டு நிலையான அபிவிருத்தி தொடர்பாக ஐ.நா. பேசிவருகிறது. ஆனால் உலக சமத்துவம் மற்றும் நிலையான அபிவிருத்தி இல்லாமல் இதனை அடைய முடியாது என்பது முக்கியமாகும்.
இந்த வரலாற்று வெசாக் தின நிகழ்வு உலகத்திற்கு ஒரு முக்கியமான செய்தியை கொண்டு செல்கிறது. புத்தர் நேபாளத்தில் பிறந்தார். இந்தியாவில் ஞானமடைந்தார். இலங்கைக்கு மூன்று முறை வருகை தந்துள்ளார். அவ்வாறு பார்க்கும் போது இந்த மூன்று நாடுகளின் தலைவர்களும் இன்று இலங்கையில் உள்ளனர்.
இது ஒரு வரலாற்று சிறப்புவாய்ந்த நிகழ்வாகும். இந்த நிகழ்விற்கு இந்தியப் பிரதமர் மோடி வருகை தந்தமை பெருமைக்குரிய விடயமாகும்.
இந்தியப் பிரதமர் மோடி இலங்கையர்களாகிய எங்களில் ஒருவராவார். எனவே அவரின் வருகையில் நாங்கள் பெருமை அடை கிறோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM