கொழும்பு, கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பழைய கட்டடம் ஒன்றின் சுவர் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (19) காலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் பதுளை அராவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுயைடவர் ஆவார்.
இவர் மேலும் சில நபர்களுடன் இணைந்து கட்டிடத்தை உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது கட்டிடத்தின் சுவர் ஒன்று இவர் மீது இடிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கட்டிடத்தின் ஒப்பந்தக்காரரின் அலட்சியம் மற்றும் கவனக்குறைவு ஆகியவையே இந்த மரணத்திற்குக் காரணம் என பணியாளர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சந்தேக நபரான 24 வயதுடைய கட்டட ஒப்பந்தக்காரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM