கொழும்பில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு

20 Nov, 2024 | 11:17 AM
image

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பழைய கட்டடம் ஒன்றின் சுவர் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (19) காலை இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் பதுளை அராவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுயைடவர் ஆவார். 

இவர் மேலும் சில நபர்களுடன் இணைந்து கட்டிடத்தை உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது கட்டிடத்தின் சுவர் ஒன்று இவர் மீது இடிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கட்டிடத்தின் ஒப்பந்தக்காரரின் அலட்சியம் மற்றும் கவனக்குறைவு ஆகியவையே இந்த மரணத்திற்குக் காரணம் என பணியாளர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சந்தேக நபரான 24 வயதுடைய கட்டட ஒப்பந்தக்காரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காலியில் உள்ள ஹோட்டலில் சாப்பிட வந்த...

2025-04-18 02:55:21
news-image

"சிறி தலதா வழிபாடு" இன்று முதல்...

2025-04-18 01:45:51
news-image

தபால்மூல வாக்களிப்பு : 20ஆம் திகதிக்கு...

2025-04-17 21:45:00
news-image

ஜி.எஸ்.பி. பிளஸை தக்கவைப்பது அவசியம் -...

2025-04-17 21:49:14
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ; ஜனாதிபதி...

2025-04-17 21:46:34
news-image

இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை உடன் வெளிப்படுத்த...

2025-04-17 21:44:01
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை...

2025-04-17 21:43:12
news-image

அஹுங்கல்லவில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் காயம்

2025-04-17 22:21:31
news-image

பிள்ளையானின் கைதால்  ரணில், கம்மன்பில கலக்கம்...

2025-04-17 21:46:12
news-image

குளத்தில் நீராடிய இளைஞன் நீரில் மூழ்கி...

2025-04-17 21:58:59
news-image

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க...

2025-04-17 21:14:06
news-image

சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய வடக்கு தலைவர்கள்...

2025-04-17 21:02:04