ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட களு அக்கல, கஹஹேன மற்றும் பஹத்கம ஆகிய பகுதிகளில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் மூன்று சந்தேக நபர்கள் நேற்று திங்கட்கிழமை (18) கைது செய்யப்பட்டுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
ஹங்வெல்ல பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட 03 சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஹங்வெல்ல மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வசிக்கும் 22 , 30 மற்றும் 38 வயதுடையவர்கள் ஆவர்.
சந்தேக நபர்களிடம் இருந்து ,11 கிராம் 650 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் , 12 கிராம் 700 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 14 கிராம் 670 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான ,மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM