தெஹிவளை நெதிமால பிரதேசத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி நபர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான துப்பாக்கித் தாரி உட்பட இருவர் நேற்று திங்கட்கிழமை (18) கைது செய்யப்பட்டதாக மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளது.
கொலை செய்யப்பட்டவர் தெஹிவளையில் பிரதேசத்தைச் சேர்ந்த அனுர கோஸ்தா என்பவர் ஆவார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
போதைப்பொருள் கடத்தல் காரர்களும் பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவர்களுமான படோவிட்ட கொஸ் மல்லி மற்றும் படோவிட்ட அசங்க ஆகிய இருவருக்கு இடையில் ஏற்பட்ட போதைப்பொருள் தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் , பாதுக்க பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய நபரும் அத்துருகிரிய பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய நபரும் ஆவர்.
சந்தேக நபர்களிடமிருந்து துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் , துப்பாக்கி மற்றும் 8 தோட்டாக்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்பு பிரிவினர் முற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM