மக்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய அரசியல் கலாசார மாற்றத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச்செல்ல முழுமையான ஆதரவு - ஹர்ஷ டி சில்வா

Published By: Digital Desk 2

17 Nov, 2024 | 10:36 PM
image

(எம்.மனோசித்ரா)


நாட்டில் வடக்கு, தெற்கு மற்றும் மலையகம் என சகல மக்களும் அபிவிருத்தியடைந்த நாட்டை உருவாக்குவதற்கான அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்கியிருக்கின்றனர். மக்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய அரசியல் கலாசார மாற்றத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு ஒத்துழைப்புக்களை வழங்க தீர்மானித்துள்ளதாக கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பொதுத் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் தனக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி கூறி வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :

கடந்த தேர்தலை விட இம்முறை இரு மடங்கு அதிக விருப்பு வாக்குகளை வழங்கி என்னை வெற்றி பெறச் செய்த கொழும்பு மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். பாராளுமன்றத்தில் எனது செயற்பாடுகளுக்கு மக்கள் மத்தியில் கிடைக்கப் பெற்ற வரவேற்பாகவே நான் இதனைப் பார்க்கின்றேன்.

அதேபோன்று எதிர்வரும் காலங்களிலும் மக்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கையை பாதுகாக்கும் வகையில் செயற்படுவேன். ஊழலுக்கு எதிராக போராடுவது, பொருளாதார தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தல் என்பவற்றை தொடர்ந்தும் மேற்கொள்வேன்.

எனினும் நாட்டில் வடக்கு, தெற்கு மற்றும் மலையகம் என சகல மக்களும் அபிவிருத்தியடைந்த நாட்டை உருவாக்குவதற்கான அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்கியிருக்கின்றனர். இது புதியதொரு கலாசாரமாகும். எதிர்க்கட்சி எம்.பி.யாக மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தீர்மானித்திருக்கின்றேன்.

பொருளாதாரம் தவறான பாதையில் சென்றால் அதற்கு எதிராகக் குரல் கொடுத்து மக்களுக்காக முன்னிப்பதற்கு, ஊழல் மோசடிக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு ஒருபோதும் பின்வாங்க மாட்டேன். மக்கள் ஏற்படுத்தியிருக்கின்ற இந்த புதிய அரசியல் கலாசார மாற்றத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கும் நான் தயாராகவுள்ளேன் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-18 11:56:33
news-image

70 மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்தியமை...

2025-02-18 11:55:02
news-image

உப்புவெளியில் இரண்டு கஜ முத்துக்களுடன் இளைஞன்...

2025-02-18 11:15:58
news-image

கட்டுகஸ்தோட்டையில் சிதைவடைந்த நிலையில் ஆணொருவர் சடலமாக...

2025-02-18 11:10:46
news-image

வெலிபென்ன பகுதியில் ஹெராயின் , துப்பாக்கி,...

2025-02-18 11:00:46
news-image

தமிழ்நாட்டுமீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர்துப்பாக்கிச்சூடு: மத்திய...

2025-02-18 10:59:10
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கல்விக்கு...

2025-02-18 10:58:57
news-image

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் நால்வர் கட்டுநாயக்கவில் கைது

2025-02-18 11:27:31
news-image

போலி விசாவை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச்...

2025-02-18 10:28:24
news-image

சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பலம் படைத்தவர்களை...

2025-02-18 10:47:04
news-image

இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய ஆகிய பகுதிகளில் ஆரோக்கியமற்ற...

2025-02-18 09:46:11
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் பலி...

2025-02-18 09:49:06