கஹதுடுவையில் 66 கடவுச்சீட்டுகளுடன் இருவர் கைது!

Published By: Digital Desk 2

17 Nov, 2024 | 02:17 PM
image

கஹதுடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சியம்பலாகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் 66 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கஹதுடுவ பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சியம்பலாகொட பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயது ஆணொருவரும் 38 வயது பெண்ணொருவருமே கைதாகியுள்ளனர்.

கைதான பெண் சிங்கப்பூர், ஹொங்கொங், துபாய் மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளில் பணிபுரிந்து 2022ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்து, சியம்பலாகொடயில் உள்ள வீட்டில் கைதான ஆணுடன் வசித்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர், வெளிநாட்டு வேலை பெற்றுத் தருவதாக கூறி, சுமார் இரண்டரை வருடங்களாக பலரிடம் கடவுச்சீட்டுக்களை வாங்கி வந்திருக்கிறார். 

இந்த கடவுச்சீட்டுக்களை ராஜகிரிய பிரதேச வீதிகளில் காத்திருந்தும், வாகனங்களில் அமர்ந்தவாறும் பலரிடம் பெற்றிருக்கிறார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.  

அத்துடன், வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்கள் மூலம் விசாவுக்கு விண்ணப்பிப்பதாகவும், வேலைக்கான நேர்காணலில் பங்கேற்கச் செய்து வெளிநாட்டு வேலை பெற்றுத் தருவதாகவும் கூறி, பல நபர்களிடம் 2 - 3 லட்சம் ரூபாய் வாங்கியிருப்பதும் விசாரணைகளின் ஊடாக அறிய முடிகிறது. 

மேலும், கைதான சந்தேக நபர்கள் தங்கியிருந்த வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, 20 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹதுடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிரிஷ் கட்டிட வழக்கு விசாரணைகளிலிருந்து மற்றுமொரு...

2025-03-27 12:21:18
news-image

இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த குற்றச்சாட்டில்...

2025-03-27 12:30:59
news-image

விமான எதிர்ப்பு தோட்டாக்களுடன் இராணுவ வீரர்...

2025-03-27 11:37:26
news-image

கற்களை ஏற்றிச் சென்ற பாரஊர்தி விபத்து

2025-03-27 12:02:05
news-image

கடற்சார் பொருளாதாரம் ஊடாக நாட்டுக்கு நன்மைகளை...

2025-03-27 11:54:43
news-image

பாணந்துறை - இரத்தினபுரி வீதியில் திடீரென...

2025-03-27 11:26:19
news-image

மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு...

2025-03-27 11:23:40
news-image

மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக குருணாகலுக்கு பீடி...

2025-03-27 11:23:14
news-image

இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகள் தாய்நாட்டில்...

2025-03-27 11:03:55
news-image

அம்பாறை ஒலுவில் துறைமுகத்தின் செயற்பாடுகளை மீள...

2025-03-27 11:03:31
news-image

கிரிஷ் கட்டிட வழக்கு விசாரணைகளிலிருந்து விலகுகிறேன்...

2025-03-27 10:55:22
news-image

நாட்டில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்...

2025-03-27 10:46:51