தேசியப் பட்டியலை வடக்கில் உள்ள இந்திய வம்சாவளி சார்பில் எனக்கு வழங்கவும்! - நடராஜா தமிழரசுக் கட்சிக்கு கடிதம் 

17 Nov, 2024 | 09:26 PM
image

இலங்கை தமிழ் அரசு கட்சிக்கு கிடைத்துள்ள தேசியப் பட்டியல் ஆசனத்தை வடக்கில் உள்ள இந்திய வம்சாவளி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி தனக்கு வழங்குமாறு முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் நடராஜா தமிழ் அரசுக் கட்சியின் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்

அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

எம்.பி. நடராஜ் ஆகிய நான் இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் அங்கத்துவம் பெற்ற உறுப்பினர். 1995ஆம் ஆண்டு தொடக்கம் இக்கட்சியுடன் இணைந்து பயணித்துள்ளேன். 2005இல் இக்கட்சியின் வவுனியா மாவட்ட கிளையின் செயலாளராகவும் கடமையாற்றினேன். 

2013ஆம் ஆண்டு நடைபெற்ற வட மாகாண சபை தேர்தலில் எமது கட்சியில் போட்டியிட்டு 10,800 வாக்குகளைப் பெற்றதுடன் சுழற்சிமுறையில் வட மாகாண சபையின் உறுப்பினராகவும் கடமையாற்றினேன். 

2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கு வாழ் மலையக தமிழ் மக்கள் சார்பாக மீன் சின்னத்தில் போட்டியிட்டு கிடைத்த 2 ஆசனங்களின் ஒத்துழைப்பின் மூலம் எமது கட்சி வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் ஆட்சி அமைத்ததனை தாங்கள் அறிவீர்கள். 

வடக்கில் வாழ்கின்ற சுமார் 2,00,000 மலையக மக்கள் சார்பாக இம்மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் தேவை என்பதனை தாங்கள் அடிக்கடி வலியுறுத்தியும் வந்துள்ளீர்கள். அந்த வகையில் 2024 பாராளுமன்ற தேர்தலில் எமது கட்சிக்கு கிடைத்துள்ள தேசியப் பட்டியல் ஆசனத்தை வடக்கில் வாழ்கின்ற மலையக மக்கள் சார்பாக எனக்கு தந்துதவுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறேன். 

எமது கட்சியினால் தேர்தல் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட தேசியப் பட்டியல் முன்மொழிவில் எனது பெயரும் தங்களால் பரிந்துரைக்கப்பட்டது என்பதையும் நினைவுகூருகின்றேன் என்றுள்ளது. 

இதேவேளை இக்கடித்தின் பிரதிகள் கட்சியின் தலைவர் எஸ். சேனாதிராஜா, சி. சிறீதரன், எம்.ஏ. சுமந்திரன் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

70 மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்தல்...

2025-02-18 11:34:40
news-image

உப்புவெளியில் இரண்டு கஜ முத்துக்களுடன் இளைஞன்...

2025-02-18 11:15:58
news-image

கட்டுகஸ்தோட்டையில் சிதைவடைந்த நிலையில் ஆணொருவர் சடலமாக...

2025-02-18 11:10:46
news-image

வெலிபென்ன பகுதியில் ஹெராயின் , துப்பாக்கி,...

2025-02-18 11:00:46
news-image

தமிழ்நாட்டுமீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர்துப்பாக்கிச்சூடு: மத்திய...

2025-02-18 10:59:10
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கல்விக்கு...

2025-02-18 10:58:57
news-image

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் நால்வர் கட்டுநாயக்கவில் கைது

2025-02-18 11:27:31
news-image

போலி விசாவை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச்...

2025-02-18 10:28:24
news-image

சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பலம் படைத்தவர்களை...

2025-02-18 10:47:04
news-image

இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய ஆகிய பகுதிகளில் ஆரோக்கியமற்ற...

2025-02-18 09:46:11
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் பலி...

2025-02-18 09:49:06
news-image

முல்லைத்தீவு பகுதியில் தகராறில் குடும்பஸ்தர் ஒருவர்...

2025-02-18 09:09:26