“பரீட்சை எழுத வேண்டுமா? உள்ளாடைகளைக் கழற்றுங்கள்”

Published By: Devika

09 May, 2017 | 02:51 PM
image

கேரளாவில், ‘நீட்’ எனப்படும் உயர்கல்விக்கான அனுமதிப் பரீட்சை எழுதச் சென்ற மாணவியரிடம், உள்ளாடைகளைக் கழற்றிவிட்டு வருமாறு கூறிய நான்கு ஆசிரியர்கள் தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில், ‘நீட்’ எனப்படும் தேசிய தகுதிகாண் மற்றும் அனுமதிப் பரீட்சை நடப்பது வழக்கம். இதில் சித்தியெய்துபவர்கள் அரச மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலைப் பட்டம் கற்க அனுமதிக்கப்படுவர். இதற்கான அனுமதிப் பரீட்சைகள் இன்று நடைபெற்றன.

இத்தேர்வின்போது மாணவ, மாணவியர் விடைகளைப் பார்த்து எழுத வாய்ப்புள்ளது என்பதனால் ஆடைக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது வழக்கம்.

எனினும், கேரளாவின் கன்னூர் மாவட்டத்தின் ‘நீட்’  நிலையம் ஒன்றில், பரீட்சை எழுத வந்த மாணவியர் உள்ளாடையைக் கழற்றிவிட்டு வந்து பரீட்சை மண்டபத்தில் அமருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

உள்ளாடைகளைக் கழற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்ட மாணவியர் அதிர்ச்சியடைந்தபோதும், பரீட்சைக்கு நேரமானதாலும், அடுத்து என்ன செய்வது என்று தெரியாததாலும் உள்ளாடைகளைக் கழற்றி, மண்டபத்தின் வெளியே நின்ற தங்களது பெற்றோரிடம் கொடுத்துவிட்டு வந்து பரீட்சை எழுதினர்.

இதுபற்றித் தெரியவந்த பெற்றோர், நீட் நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனினும், பரீட்சையில் விடைகளைப் பார்த்து எழுத மாணவர்கள் முயற்சிக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் கூறினர்.

எனினும், இது பற்றி அறிந்த பெண்கள் அமைப்பினரின் ஆர்ப்பாட்டத்தால், குறித்த நீட் நிலையத்தின் நான்கு ஆசிரியர்கள் தற்காலிகமாகத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்தப் பிரச்சினை குறித்து கேரள முதலமைச்சரிடம் மனு கொடுக்கப் போவதாக பாதிக்கப்பட்ட மாணவியரின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08
news-image

பரப்புரைக்காக தமிழ்நாடு சென்ற ராகுல் காந்தி...

2024-04-15 13:08:34