வெள்ளத்தில் மூழ்கியது மூதூர் கட்டைப்பறிச்சான் பாலம் !

13 Nov, 2024 | 05:01 PM
image

மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கட்டைபறிச்சான் இறால் பாலம் தாழிறங்கி முற்றாக நீரில் மூழ்கியுள்ளது. இதனால் அப்பாலத்தின் வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இப்பாலத்தில் ஊடாகவே பாடசாலை மாணவர்கள், விவசாயிகள், வியாபாரிகள் உட்பட பலரும் பிரயாணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

20க்கு மேற்பட்ட கிராமங்களில் வாழும் மக்கள் தமது அன்றாட தேவைகளுக்காக இந்த பாலத்தினை பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும், நாளை (14) நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக மக்கள் இப்பாலத்தின் ஊடாகவே செல்லவேண்டியுள்ளது.

இதனால் தேர்தலில் வாக்களிக்க இயலாமல் கூட போகலாம் என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர். 

இப்பாலத்தில் வெள்ள நீர் அதிகரித்துள்ளதனால் ஆபத்தான நிலையில் பொது மக்கள் இந்த பாலத்தினூடாக செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அடையாளம் காண முடியாதபடி பாலம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதனால், பாலத்தின் இரு கரைகளையும் கண்டுகொள்ள முடியாமல் நடைபயணம் மேற்கொள்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். 

எனவே, பொதுமக்கள் சென்று வருவதற்கு ஏற்ற வகையில் இந்த பாலத்தினை மீட்டுத் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ...

2025-03-18 12:43:13
news-image

02 கிலோ கஞ்சா போதைப்பொருளுடன் இளைஞன்...

2025-03-18 12:32:04
news-image

மீண்டும் அரசியலுக்கு பிரவேசிக்கவிருப்பதாக லொகான் ரத்வத்தை...

2025-03-18 12:28:36
news-image

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

2025-03-18 12:05:27
news-image

யாழ். குருநகரைச் சேர்ந்த காணாமல்போன மீனவர்களை...

2025-03-18 12:19:43
news-image

கடையின் சுவரை இடித்து சேதப்படுத்திய காட்டு...

2025-03-18 12:45:53
news-image

மீன்பிடி அமைச்சால் கொண்டுவரவிருக்கும் கடற்றொழில் சட்டம்...

2025-03-18 11:57:48
news-image

நிலாவெளியில் வாகன விபத்து ; முச்சக்கரவண்டி...

2025-03-18 11:57:09
news-image

120 மில்லியன் ரூபாய் பெறுமதியான சிகரட்டுகள்...

2025-03-18 11:43:21
news-image

பாராளுமன்றம் பற்றி எழுதப்பட்ட இரண்டு நூல்கள்...

2025-03-18 11:56:33
news-image

“கணேமுல்ல சஞ்சீவ“ படுகொலை ; கைது...

2025-03-18 11:24:42
news-image

ஏப்ரல் மாதம் முதல் அதிகரிக்கப்படும் பால்மாவின்...

2025-03-18 11:20:29