கெட்ட வார்த்தையில் திட்டிய அயலவரைக் கொன்ற கனேடிய இலங்கையருக்கு ஆயுள் தண்டனை

Published By: Devika

09 May, 2017 | 11:41 AM
image

கனடாவில், கெட்ட வார்த்தைகளால் திட்டிய அயலவரைக் கொலை செய்த வழக்கில், இலங்கையைச் சேர்ந்த அமலன் தண்டபாணி தேசிகர் என்பவரை கனேடிய நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது.

மொன்றியலைச் சேர்ந்த அமலன், அவரது அயலவரான ஜெயராசன் மாணிக்கராஜா என்பவரை 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் திகதி கத்தியால் குத்திக் கொன்றார். அமலனைக் கைது செய்த பொலிஸார் அவர் மீது வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கில், முதற்றர குற்றவாளியாகக் கருதப்பட்ட அமலன், நேற்று திங்கட்கிழமை பன்னிரண்டு ஜூரிகள் அடங்கிய அமர்வு முன் நடைபெற்ற விசாரணையின்போது, முதற்றரக் குற்றவாளியாக அடையாளம் காணப்பட போதிய முகாந்திரம் இல்லாத நிலையில், இரண்டாம் தரக் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டார். அவருக்கு ஆயுட்கால சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

கொலை இடம்பெறுவதற்கு சுமார் ஒரு வாரம் முன்பாகவே அமலனின் மனைவியிடம் ஜெயராசன் எல்லை மீறியதைச் சுட்டிக்காட்டிய ஜூரிகள், இது கோபத்தினால் இடம்பெற்ற கொலை என்றும் திட்டமிடப்பட்டதல்ல என்றும் குறிப்பிட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17