கொழும்பில் தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக்கொள்ள தமிழ் மக்கள் ஒன்றுபட்டு வாக்களிக்க வேண்டும் - எஸ்.இராஜேந்திரன்

Published By: Vishnu

11 Nov, 2024 | 06:45 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

கொழும்பு மாவட்டத்தின் தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் நோக்கிலே ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இந்தமுறை கொழும்பில் போட்டியிட தீர்மானித்திருக்கிறது. நிச்சயமாக கொழும்பு மாவட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஒத்துழைப்பு கிடைக்கும் என கொழும்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் எஸ். இராஜேந்திரன தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (11) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இந்முறை பாராளுமன்ற தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி 10 மாவட்டங்களில் போட்டியிடுகின்றது. எமது கட்சிக்கு அனைத்து மாவட்டங்களில் பாரிய வரவேற்பு கிடைத்து வந்தது. அதனால் மக்கள் இந்த தேர்தலில் சிந்தித்து வாக்களித்தால் எங்களுக்கு அதிக பிரதிநிதித்துவங்களை பெற்றுக்கொள்ளலாம். அதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் நோக்கிலே இந்தமுறை கொழும்பில் போட்டியி தீர்மானித்தோம்.

கொழும்பு மாவட்டத்தில் 20 வருடங்களாக தமிழ் மக்கள் பிரதிநிதியாக இருந்துவந்தவர்கள் கொழும்பு மக்களுக்கு எதனையும் செய்யவில்லை. தேர்தல் காலங்களில் மாத்திரம் மக்களுக்கு பொய் வாக்குறுதிகளை அளித்து, வெற்றிபெற்ற பின்னர் மக்களை மறந்துவிடுகிறார்கள். இதனால் கடந்த கடந்த பொதுத் தேர்தலிலும் தமிழ் பிரதிநிதித்துவம் இறுதிக்கட்டத்திலேயே பாதுகாக்கப்பட்டது. 

அதனால் இந்த தேர்தலில் கொழும்பில் தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக்கொள்ளவே எமது கட்சி கொழும்பில் போட்டியிட தீர்மானித்தது. அதனால் கொழும்பு தமிழ் மக்கள் ஒன்றுபட்டு வாக்களித்தால் இரண்டு தமிழ் பிரதிநிதித்துவங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-01-22 13:26:40
news-image

பாடசாலை மாணவி கடத்தல் ;  பதில்...

2025-01-22 13:23:20
news-image

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வர்த்தக...

2025-01-22 13:23:42
news-image

அர்ஜூனமகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவருவதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றோம்...

2025-01-22 13:08:48
news-image

சிறைச்சாலை கைதிக்கு புகையிலைகளை கொண்டு சென்றவர்...

2025-01-22 13:03:48
news-image

முச்சக்கர வண்டி சாரதியை தடுத்துவைத்து சித்திரவதை...

2025-01-22 12:55:09
news-image

இலங்கையில் பதில் துணைவேந்தர்களுடன் இயங்கும் பல்கலைக்கழகங்களின்...

2025-01-22 12:58:57
news-image

களுத்துறை தேவாலயத்தில் பெறுமதியான சிலைகள் திருட்டு...

2025-01-22 12:36:59
news-image

திருகோணாமலை - மூதூரின் தாழ் நிலப்பகுதிகள்...

2025-01-22 12:44:35
news-image

இலங்கையில் சமத்துவம், உண்மை, நீதிக்கான முயற்சிகளை...

2025-01-22 12:18:15
news-image

உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் ஐவர் கைது

2025-01-22 12:11:13
news-image

மூடப்பட்ட கண்டி - மஹியங்கனை பிரதான...

2025-01-22 12:41:05