வீதியில் குப்பை கொட்டுபவர்களை இனங்கண்டு, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதில் யாழ்ப்பாணம் மாநகர சபை கவனம் செலுத்தி வருகிறது.
ஓட்டுமடம் சந்தியிலிருந்து வட்டுக்கோட்டை ஊடாக காரைநகர் செல்லும் வீதியில் விலங்குக் கழிவுகள் ஆங்காங்கே காணப்படுவதோடு, வைத்தியசாலை கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் என்பனவும் தொடர்ச்சியாக கொட்டப்பட்டு வருகின்றன.
இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், கொட்டப்படும் கழிவுகளை உண்பதற்கு நாய்கள் அவ்விடத்துக்குச் செல்வதனால் வாகன விபத்துக்களும் ஏற்பட்டுள்ளன.
இதைப் பற்றி பல தடவை ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், CCTV கமராக்கள் மூலம் 24 மணிநேரமும் அப்பகுதியை கண்காணிப்பதற்கும், வீதியில் கழிவுகளை கொட்டுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் மாநகர சபை தயாராகியுள்ளது.
அத்துடன், அப்பகுதியிலிருந்து 100 மீட்டர்கள் தொலைவில் உள்ள மீள்சுழற்சி நிலையத்துக்கு சென்று குப்பை பொதிகளை கொடுக்க முடியும் என்ற அறிவித்தலையும் மாநகர சபை வீதிகளில் காட்சிப்படுத்தியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM