தேர்தல் களத்தில் உள்ள கட்சிகளில் பலமான கூட்டணியாகவும் தமிழ் மக்களுக்கான மாற்றுத்தெரிவாகவும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியே இருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வன்னி மாவட்ட வேட்பாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
வவுனியாவில் இன்று (11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து, கருத்து தெரிவித்த அவர்,
வன்னியில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியானது இங்கு போட்டியிடுகின்ற கட்சிகளை விட அதிகூடிய வாக்குகளை பெற்று மூன்று ஆசனங்களை பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக்கள் இருக்கிறது.
இன்று தேர்தல் களத்தில் உள்ள கட்சிகளில் பலமான கட்சியாகவும் கூட்டணியாகவும், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியே உள்ளது. கடந்த காலங்களில் அனைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக பயணித்த அந்த கட்சி இன்று நிலைகுலைந்து சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ் மக்களுக்காக இன்று இருக்கக்கூடிய மாற்றுத்தெரிவு ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியே. மக்களின் பல பிரச்சினைகள் இங்கு தீர்க்கப்படவில்லை. தங்களின் பிரச்சினைகளை தீர்க்க எந்த ஒரு தரப்பும் முன்வரவில்லை என்று பொதுமக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
புதிய அரசாங்கம் சோசலிசம் சமத்துவம் என்ற கொள்கையை முன்னிறுத்தி ஆட்சியை முன்னெடுக்கிறது. இது சிங்கள மக்களுக்கு பொருத்தமாக இருக்கும். தமிழ் மக்களுக்கு பொருத்தமில்லாத ஒன்று.
எமக்கு நீண்டகால பிரச்சினை உள்ளது. சுயநிர்ணய உரிமைக்காக தொடர்ச்சியாக எமது மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். எனவே, இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு நடைமுறைக்கு சாத்தியமான ஒரு விடயத்தை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM