கொழும்பில் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது !

Published By: Digital Desk 2

10 Nov, 2024 | 09:20 PM
image

கொழும்பு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட இரு வேறு சுற்றிவளைப்புக்களின் போது கல்கிஸ்சை மற்றும் உடுகம பகுதிகளில் மூவர் நேற்று சனிக்கிழமை (09) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸ்சை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட , பதவல வீதிக்கு அருகில் , ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்கிஸ்சை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்  மேற்கொள்ளப்பட்ட இரு சுற்றிவளைப்புக்களின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 38, 40 வயதுடைய மக்கொன மற்றும் மொரட்டுவ  பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து , 10 கிராம் 350 மில்லிகிராம்  மற்றும் 11 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள், பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை , இவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கல்கிஸ்சை  பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் , உடுகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமகிகம பிரதேசத்தில், ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொரட்டுவ பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின்  அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 46 வயதுடைய  உடுகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 12 கிராம் 700 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதே வேளை , இவர் மேலதிக விசாரணைகளுக்காக  உடுகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மேலும் , மிரிஹான பொலிஸ் பிரிவில் ,  ஐஸ் மற்றும் கையடக்க தொலைபேசியுடன் ஒருவர்  சனிக்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் , 30 வயதுடைய பேலியகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 52 கிராம் 340 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கையடக்க தொலைபேசி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதே வேளை கைது செய்யப்பட்டவர் ,  மிரிஹான பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

ஹங்வெல்ல பொலிஸ் பிரிவில் , ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கொனஹேன முகாமின் அதிகாரிகள் குழுவொன்று  மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 10 கிராம் 510 மில்லிகிராம் ஹெரோயின் , 08 கிராம் 570 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் , போதைப்பொருள் விற்பனையில் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 18500 ரூபா ரொக்கப்பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதே வேளை கைது செய்யப்பட்டவர் , ஹங்வெல்ல பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இது தொடர்பான , மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸ  மற்றும் உடுகம  பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்போடியா - தாய்லாந்து யுத்தம் நிறுத்தக்...

2025-12-16 10:33:26
news-image

இலங்கைக்கும் கசகஸ்தான் குடியரசுக்கும் இடையிலான உறவைப்...

2025-12-16 10:34:43
news-image

போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட்...

2025-12-16 10:27:32
news-image

பண்டிகை காலத்தில் வழிபாட்டுத் தலங்களில் விசேட...

2025-12-16 10:19:20
news-image

135 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட...

2025-12-16 10:09:02
news-image

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார...

2025-12-16 10:06:19
news-image

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: சந்தேகநபருடன்...

2025-12-16 09:57:17
news-image

நீரில் மூழ்கி ஒருவர் மாயம்

2025-12-16 09:39:03
news-image

அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்க...

2025-12-16 09:38:28
news-image

பல குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் போதைப்பொருளுடன்...

2025-12-16 09:10:48
news-image

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து கொடுப்பனவு இன்று...

2025-12-16 09:09:33
news-image

பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட ஐந்து...

2025-12-16 08:51:12