பனாமுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, முலடியாவல மலபலவ வீதியில், மோட்டார் சைக்கிள் ஒன்று உழவு இயந்திரத்துடன் மோதியதில் , மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எம்பிலிபிட்டிய முலடியாவல பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய இளைஞரே இவ் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவது ,
முலடியாவலயிலிருந்து மலபலாவ நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மலபலாவயிலிருந்து முலடியாவல நோக்கி பயணித்த உழவு இயந்திரத்துடன் மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சடலம் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் உழவு இயந்திரத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பனாமுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM