இந்த பிறவியில் ஆகாம்ய கர்மா, பிராப்த்தகர்மா ஆகிய கர்மாக்களின் பிடியில் சிக்கி, எமக்கான சுப பலன்களில் தாமதத்தையும், எமக்கான கெடு பலன்களில் விரைவு தன்மையையும் நாம் எதிர்கொள்கிறோம். இதனால் மகிழ்ச்சியை விட கவலை அதிகமாக எம்மை ஆட்கொள்கிறது.
இந்நிலையில் இந்த பிறவியில் மட்டுமல்லாமல் கடந்த பிறவிகளில் நாம் செய்த பாவங்களின் அடிப்படையில் எமக்கு விதிக்கப்பட்டிருக்கும் கர்மாக்களில் இருந்து விலகுவதற்கான பரிகாரத்தை எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் நாம யோகத்தின் அடிப்படையில் சூட்சமமாக உணர்த்தி இருக்கிறார்கள்.
இந்தப் பிறவியில் நீங்கள் செய்த பாவங்களும், கடந்த பிறவியில் உங்களது முன்னோர்கள் செய்த பாவங்களும், உங்களுக்கு அடுத்ததாக இந்த உலகை உலகில் வாழும் உங்களுடைய வாரிசுகளுக்கு கர்மாக்களினால் எந்த வித தொல்லையும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் நாம யோகத்தின் வரிசையில் முதலாவதாக இடம் பிடித்திருக்கும் விஷ்கம்பம் நாம யோகத்தை பயன்படுத்தலாம்.
இந்த நாம யோகத்தில் ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிட்ட பரிகாரத்தை செய்தால் கடந்த பிறவி, இந்தப் பிறவி, அடுத்த பிறவி , ஆகிய முப்பிறவியிலும் செய்த பாவங்கள் விலகி, சுப பலன்கள் கிடைக்கும்.
அதற்கு சனிக்கிழமையும், விஷ்கம்பம் நாம யோகமும் இணைந்து வரும் நாட்களில் கல் உப்பையும், மிளகையும் எடுத்துக் கொண்டு அருகில் இருக்கும் (கம்பத்தடி) மாரியம்மன் ஆலயத்திற்கு சென்று அங்கு அனுமதிக்கப்பட்ட இடத்தில் இந்த இரண்டையும் வைத்து மனதார பிரார்த்தனை செய்து வந்தால் முற்பிறவி கர்மாவின் கெடு பலன்கள் குறைவதுடன், வீடு, வாகனம் தொடர்பான அனைத்து வித பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம்.
மேலும் இவர்கள் இந்தியாவின் தென்பகுதியில் உள்ள திருச்சி மாநகரத்திற்கு அருகே இருக்கும் முக்கொம்பு எனும் சுற்றுலா தலத்திற்குச் சென்று அந்த தலத்திற்கு அருகே உள்ள ஜீவ சமாதியில் சனிக்கிழமைகளில் வழிபட்டாலும் முப்பிறவியிலும் செய்த கர்மாக்களின் கெடு பலன்கள் குறைந்து, சுப பலன்கள் கிடைக்கும்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM