திரிபோஷா நிறுவனத்தை மூடிவிட அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் - ராஜித்த அரசாங்கத்திடம் கோரிக்கை

Published By: Vishnu

08 Nov, 2024 | 08:18 PM
image

திரிபோஷா நிறுவனத்தை மூடிவிட எடுத்திருக்கும் தீர்மானம் தொடர்பில் அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும். இது சிறுவர்களின் பாேஷாக்கு தேவைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணி தேர்தல் வழிநடத்தல் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

திரிபோஷா நிறுவனத்தை மூடிவிடுவதற்கு அல்லது ஒடுக்கிவிடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. திரிபோஷா இந்த நாட்டில் பாரம் குறைந்த சிறுவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் போஷாக்கை கருத்திற்கொண்டு அரசாங்கத்தினால் வழங்கப்படும் வேலைத்திட்டமாகும்.

போஷாக்கு என்ற அடிப்படையில் நாங்கள் திரிபோஷா மாத்திரமே கொடுத்து வருகிறோம். அதனை நிறுத்துவது எதிர்காலத்தில் பாரிய போஷாக்கு குறைபாட்டு பிரச்சினைக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

எமது நாட்டில் மாதம் ஒன்றுக்கு 1.6 மில்லியன் திரிபோஷா பொதி விநியோகிக்கப்படுகிறது. 2015 காலத்தில் இதன் அளவு 70வீதமாகவே இருந்தது. என்றாலும் 2016இல் நான் சுகாதார அமைச்சராக வந்தபோது யுனிசெப் நிறுவனத்தின் உதவியுடன் திரிபோஷா திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்தேன். இதன்மூலம் உற்பத்தி அளவை 100வீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்தேன்.

திரிபோஷா நிறுவனம் லாபமீட்டும் நிறுவனம் அல்ல. என்றாலும் திரிபோஷா போன்றே சுவ போஷா என்ற சத்துணவை அறிமுகப்படுத்தி இந்த நிறுவனத்தை லாமீட்ட நடவடிக்கை எடுத்தேன். என்றாலும் நட்டத்தில் இருக்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் திட்டத்தில் திரிபோஷா நிறுவனமும் உள்ளடக்கப்பட்டபோது நான் தலையிட்டு அதனை நிறுத்தினேன். தனியார் நிறுவனங்கள் பல திரிபாேஷா நிறுவனத்தை விலைக்கு பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்திருந்தது. என்றாலும் அதற்கு நாங்கள் இடமளிக்கவில்லை.

தற்போது மக்கள் விடுதலை முன்னணியின் விபாரிகள் சிலரே இந்த நிறுவனத்தை மூடிவிட ஜனாதிபதிக்கு ஆலாேசனை வழங்கி இருக்கவேண்டும். தற்போது இதனை மூடிவிட்டு சில காலங்களில் தனியாருக்கு விற்பனை செய்வதே இவர்களின் திட்டமாக இருக்கலாம். இடதுசாரி கொள்கையுடை ஜனாதிபதி ஒருவரின் ஆட்சியில், வறுமையில் இருக்கும் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் திரிபாேஷா சத்துணவை நிறுத்த நடவடிக்கை எடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிபதிகளின் பதவி நீடிப்பு தொடர்பில் ஜனாதிபதி...

2026-08-11 12:55:08
news-image

இலங்கை விமானப் பாதுகாப்புத் துறையில் வரலாறு...

2026-08-12 06:09:34
news-image

இன்றைய வானிலை 

2026-08-12 05:58:11
news-image

கல்முனை வடக்கு வைத்தியசாலை சீருடை விவகாரம்:...

2026-08-12 05:53:03
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதாரப் பொறிக்குள்...

2026-08-12 05:48:40
news-image

புதிய தேர்தல் முறைமைக்கு அமைய மாகாணசபைத்...

2026-08-12 05:45:38
news-image

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை: இறுதி...

2026-08-12 05:41:45
news-image

சவூதி அரேபியாவில் தொழில் எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்காகநடத்தப்படும்...

2026-08-12 05:19:24
news-image

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக...

2026-08-12 00:34:35
news-image

இலங்கையில் ஐ- போன் பயன்படுத்துவோருக்கு கவலை...

2026-08-12 00:28:07
news-image

மகாநாயக்க தேரர்களின் முக்கிய கடிதம் மாயம்...

2026-08-11 12:40:04
news-image

நீதிபதிகளின் பதவிக்கால நீடிப்பு தொடர்பான மகாநாயக்க...

2026-08-11 15:07:40