யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு எனது சொந்த செலவில் நினைவுத்தூபி அமைக்கத் தயார் - அங்கஜன் இராமநாதன்

04 Nov, 2024 | 11:55 AM
image

உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு எனது சொந்த செலவில் நினைவுத்தூபி அமைக்கத் தயார் என பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 

நீண்ட கால உள்நாட்டு யுத்தத்தால் நாட்டு மக்கள் பலரை இழந்துவிட்டோம். 

இனங்களுக்கிடையே புரிந்துணர்வு இன்மை மற்றும் சம உரிமை கிடைக்காமை முதலான காரணங்களால் உள்நாட்டு யுத்தம் உருவாகி அது பலரையும் காவு கொண்டுவிட்டது.

இந்த யுத்தத்தால் தமிழ் மக்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

யுத்தம் மௌனித்து 15 வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் தமிழ் மக்கள் யுத்த வடுவில் இருந்து மீள முடியாமல் உள்ளனர்.

அத்தோடு, தமிழ் மக்களுக்கு உறவுகளை நினைவுகூருவது கூட சவால் நிறைந்த ஒன்றாகவே காணப்படுகிறது.

இந்நிலையில், பொதுவான நினைவுத்தூபி ஒன்றை அமைத்து யுத்தத்தில் உயிரிழந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவ்வாறு அரசாங்கம் அனுமதி வழங்கும் பட்சத்தில் எனது சொந்த செலவில் பொதுவான நினைவுத் தூபியை நிறுவி, நாட்டில் நல்லிணக்கத்தை மலரச் செய்வதன் ஊடாக சிறந்த ஆரோக்கியமான எதிர்கால சந்ததியை உருவாக்க முடியும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31
news-image

ஹர்ஷவுக்கு ஏன் கொழும்பு மாவட்ட தலைவர்...

2025-02-15 14:40:41
news-image

நுரைச்சோலை மின்னுற்பத்தி இயந்திரங்கள் மீண்டும் செயற்பட...

2025-02-15 16:34:16
news-image

தம்பகல்ல பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய...

2025-02-15 15:42:37
news-image

மிகவும் பலவீனமான ஆட்சியே இன்று நாட்டில்...

2025-02-15 15:36:36
news-image

கொழும்பு மாவட்டத் தலைவர் பதவியை தனதாக்கிக்...

2025-02-15 14:34:51
news-image

யாழ். கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூலகத்தை...

2025-02-15 16:35:56
news-image

சுற்றுலா விசாவில் வந்து நகைத் தொழிலில்...

2025-02-15 15:38:56
news-image

புறக்கோட்டையில் ஐஸ், கொக்கெய்ன் போதைப்பொருட்களுடன் இளைஞன்...

2025-02-15 15:41:26
news-image

மாணவர்கள் இடைவிலகாத, கைவிடப்படாத கல்வி முறைமையை...

2025-02-15 14:45:49