பதுளை, பசறை, லுணுகலை வீதியில் 13 ஆம் கட்டை பகுதியில் மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்து பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
40 வயதுடைய தெய்கிந்தகம பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பசறை நகரிலிருந்து லுணுகலை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளும் லுணுகலையிலிருந்து பசறை நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த நபர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலையில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM