பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பத்தன்ன பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி தங்கை உயிரிழந்துள்ளதுடன் அண்ணன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை மதியம் (31) இடம்பெற்றுள்ளது.
11 வயதுடைய தங்கையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
உயிரிழந்த தங்கையும் 17 வயதுடைய அண்ணனும் வீட்டுக்கு முன்பாக மண்வெட்டியுடன் நின்று கொண்டிருந்த வேளையில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளனர்.
பிள்ளைகளின் சத்தத்தை கேட்ட பெற்றோர் வெளியில் வந்து பார்த்த போது தனது இரு பிள்ளைகள் கீழே விழுந்து கிடப்பதை அவதானித்து கூக்குரல் இட்டு அயலவர்களின் உதவியை நாடி உள்ளனர்.
சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த அயலவர்கள் இரு பிள்ளைகளையும் பசறை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போது, தங்கை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காயங்களுக்குள்ளான 17 வயதுடைய அண்ணன் பசறை வைத்தியசாலையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM