அயல் வீட்டாருடன் மரம் வெட்டும் போது வாக்குவாதம் : கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் கொலை

31 Oct, 2024 | 09:38 AM
image

குருணாகல், வாரியப்பொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வாகொல்ல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வாரியப்பொல பொலிஸார் தெரிவித்தார்.

இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (30) மாலை இடம்பெற்றுள்ளது.

குருணாகல், பண்டாரகொஸ்வத்தை, வாகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய பெண்ணொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

கொலை செய்யப்பட்ட பெண் அரசுக்குச் சொந்தமான காணி ஒன்றில் உள்ள வீடொன்றில் வசித்து வந்துள்ளார். 

இந்நிலையில், கொலை செய்யப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு அருகில் மரமொன்று முறிந்து வீழ்ந்ததால் இந்த பெண் அயல் வீட்டில் வசிக்கும் நபருடன் இணைந்து மரத்தின் கிளைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளார்.

இதன்போது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில் சந்தேக நபரான அயல் வீட்டில் வசிக்கும் நபர் இந்த பெண்ணை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

காயமடைந்த பெண் வாரியப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.

இதனையடுத்து, சந்தேக நபரான அயல் வீட்டில் வசிக்கும் நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

66 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியப்பொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐ.நா.வின் செப்டெம்பர் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக...

2025-03-24 20:02:33
news-image

இந்திய பிரதமருடன் அரசாங்கம் செய்துகொள்ள இருக்கும்...

2025-03-24 20:22:23
news-image

ஐ.நா.வில் புதிய பிரேரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை பிரித்தானிய...

2025-03-24 19:59:17
news-image

2 புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்...

2025-03-24 20:20:30
news-image

தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 263 வேட்புமனுக்கள்...

2025-03-24 20:18:53
news-image

தேசபந்துவை பதவி நீக்கி பொலிஸ்மா அதிபர்...

2025-03-24 19:20:07
news-image

திஸ்ஸ விகாரையின் பூஜை வழிபாடுகளுக்கு எதிர்ப்பு...

2025-03-24 19:13:15
news-image

இறக்குமதி செய்யப்பட்ட சிரி ஸ்கேன் இயந்திரம்...

2025-03-24 20:19:56
news-image

மஹிந்த, ரணிலுடன் ஒன்றிணையப் போவதாக கூறப்படுவது...

2025-03-24 16:40:52
news-image

மூன்று நாள் டெங்கு ஒழிப்பு விசேட...

2025-03-24 19:18:15
news-image

ஐ.தே.க.வுக்கு வைத்த பொறியில் ஜே.வி.பி. சிக்கிக்...

2025-03-24 19:10:48
news-image

நாட்டில் சிக்குன்குனியா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...

2025-03-24 19:21:34