ஹோமாகம நகரத்தில் சட்டவிரோதமாக தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டியதாக கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் இருவரும் ஹோமாகம நகரத்திற்கு முச்சக்கரவண்டியில் சென்று சட்டவிரோதமாக தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த போது அப்பகுதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வத்தளை, மாபோல வெலிகடமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 29 முதல் 31 வயதுக்குட்பட்ட இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 1,200 தேர்தல் சுவரொட்டிகள் மற்றும் முச்சக்கரவண்டி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM