ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு நவம்பர் முதலாம் திகதி விடுமுறை !

30 Oct, 2024 | 06:25 AM
image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊவா மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் நவம்பர் முதலாம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்நாளுக்குரிய கல்வி நடவடிக்கை எதிர்வரும் 9 ஆம் திகதி சனிக்கிழமை ஈடுசெய்யப்படவுள்ளது.

தீபாவளி பண்டிகை இம்மாதம் 31 ஆம் திகதி வியாழக்கிழமை கொண்டாடப்படுகின்றது. எனவே, நவம்பர் முதலாம் திகதி விடுமுறை வழங்குமாறு ஊவா மாகாண ஆளுநரிடம் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

இவற்றை பரிசீலித்த பின்னர், நவம்பர் முதலாம் திகதி ஊவா மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறு ஆளுநரால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்று மாகாணா கல்வி செயலாளர் காமினி மஹிந்தபால தெரிவித்தார்.

இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டிருந்தாலும், விடுமுறை வழங்கப்பட்டுள்ள பாடசாலைகளில், அந்நாளுக்குரிய கல்வி செயற்பாடு எதிர்வரும் 9 ஆம் திகதி ஈடுசெய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றும் மின்வெட்டு !

2025-02-13 09:16:59
news-image

தையிட்டி சட்டவிரோத விகாரை விவகாரம் -...

2025-02-13 08:49:04
news-image

இன்றைய வானிலை

2025-02-13 06:05:42
news-image

மக்களின் காணி மக்களுக்கே சொந்தம் -...

2025-02-13 03:11:18
news-image

இழப்பீட்டுக்கான விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளமை மகிழ்ச்சிக்குரியது...

2025-02-12 18:15:45
news-image

குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமா?...

2025-02-12 18:23:26
news-image

யாழ்ப்பாணத்தில் பழைய அரசியல் கலாசாரம் தோற்கடிக்கப்பட்டுள்ளது...

2025-02-12 18:13:39
news-image

இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஒரகல் நிறுவனம்...

2025-02-12 21:15:49
news-image

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தொடரும் தையிட்டி சட்டவிரோத...

2025-02-12 21:11:13
news-image

இழப்பீட்டுத் தொகை குறித்து பேசும் ஆளும்...

2025-02-12 18:05:05
news-image

ஐக்கிய தேசிய கட்சியுடனான பேச்சுவார்த்தை தற்காலிகமாக...

2025-02-12 18:23:50
news-image

உலக காலநிலை பிரச்சினைகளை முகங்கொடுக்க உலகளாவிய...

2025-02-12 19:49:02