பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
42 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர் அநுராதபுரம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றை வாடகைக்கு எடுத்து நீண்ட நாட்களாக பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றிலிருந்து 20 கையடக்கத் தொலைபேசிகளையும், வர்த்தக நிலையம் ஒன்றிலிருந்து 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான மூன்று மடிக்கணினிகளையும், பாடசாலை ஒன்றிலிருந்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான மடிக்கணினி ஒன்றையும் , தனியார் வர்த்தக நிலையம் ஒன்றிலிருந்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான மடிக்கணினி ஒன்றையும் திருடியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM