(எம்.ஆர்.எம்.வசீம்)
அறுகம்பை பிரதேசத்தில் தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாக கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவலை அரசாங்கம் பாரதூரமாக எடுக்கவில்லை. பிராந்திய நாடுகள் மற்றும் வெளிநாடுகளுடன் இருந்துவந்த தொடர்பு இல்லாமல் போயுள்ளதாலே இந்த புலனாய்வு தகவல் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது என முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
புதிய ஜனநாயக முன்னணி தேர்தல் வழிநடத்தல் காரியாலயத்தில் திங்கட்கிழமை (28) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
அறுகம்பை பிரதேசத்துக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறும் அங்கு தாக்குதல் இடம்பெற வாய்ப்பு இருப்பதாகவும் பல வெளிநாட்டு தூதரகங்கள் தங்களின் பிரஜைகளுக்கு கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்திருந்தன. எமது தேசிய பாதுகாப்பு தொடர்பில் சரியாக கவனம் செலுத்த தவறியிருக்கிறோம் என்ற செய்தியையே இது உலகுக்கு வெளிப்படுத்துகிறது. அந்த நிலைக்கு நாங்கள் செல்லக்கூடாது. எமது காலத்திலும் இவ்வாறான பல அச்சுறுத்தல்கள் வந்தன.
அப்போது நாங்கள் எமது புலனாய்வுத்துறையுடன் இணைந்து செயற்பட்டு, புலனாய்வு தகவல்களுக்கு பதிப்பளித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு. நாட்டின் பாதுகாப்பு, எமது மக்களின் பாதுகாப்பு மற்றும் எமது நாட்டில் இருக்கும் வெளிநாட்டவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தோம்.
உதாரணமாக ஹமாஸ் குழு இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்ட ஆரம்ப கட்டத்தில், இலங்கையில் இருக்கும் இஸ்ரேல் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என நினைத்து, நாங்கள் இஸ்ரேல் அரசாங்கத்துடன் கலந்துரையாடி, இஸ்ரேல் மக்களை விசேட விமானம் மூலம் அவர்களின் நாட்டுக்கு அனுப்பிவைத்தோம்.
இந்த விடயத்தை நாங்கள் ஊடகங்களுக்கு தெரிவித்து, பதற்ற நிலையை ஏற்படுத்த முயற்சிக்கவில்லை. இது தொடர்பாக ஊடகங்களுக்கு வெளிப்படுத்துவது இதுவே முதல்தடவையாகும். இதன் மூலம் எமது சுற்றுலா துறை மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்பட இடமளிக்கவில்லை.
என்றாலும் அறுகம்பை பிரதேசத்தில் தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாக கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவலை அரசாங்கம் பாரதூரமாக எடுக்கவில்லை என்றே எமக்கு தோன்றுகிறது. ஏனெனில் இவ்வாறான புலனாய்வு தகவல்கள் கிடைத்ததும் நாங்கள் அது தொடர்பில் நாங்கள் எமது பிராந்திய நாடுகள், வெளிநாடுகளுடன் சிறந்த தொடர்பை ஏற்படுத்தி அவர்களுடன் இணைந்து செயற்பட்டுவந்தோம்.
ஆனால் தற்போது அந்த தொடர்பு இல்லாமல் போயுள்ளதாலே இந்த புலனாய்வு தகவல் பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதேபோன்று வெளிநாட்டு தூதரகங்கள் இந்த தகவலை வெளிப்படுத்தும்வரை அரசாங்கமோ எமது பாதுகாப்பு பிரிவோ இது தொடர்பில் முன்கூட்டி அறிந்து செயற்படுவதை எங்களால் காண முடியவில்லை. இந்த அச்சுறுத்தல் அறிவிப்பு வெளிப்பட்ட பின்னரே பாதுகாப்பு தரப்பினர் அது தொடர்பில் செயற்பட ஆரம்பித்ததாகவே எமக்கு தகவல் கிடைத்தது.
எனவே யார் அரசாங்கம் செய்தாலும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் புலனாய்வு தகவல் கிடைத்தால் அதற்கு முன்னுரிமை கொடுத்து, அது தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மாறாக அதனை அரசியலாக்கிக்கொண்டு ஊடக களியாட்டம் மேற்கொள்ள வேண்டாம் என அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM