அம்பாந்தோட்டை , சூரியவெவ மீகஹஜதுர பிரதேசத்தில் தக்காளி பயிர்ச்செய்கை என்ற போர்வையில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்ததாகக் கூறப்படும் சந்தேக நபரொருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளதாக சூரியவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
சூரியவெவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாந்தோட்டை , சூரியவெவ பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நீண்ட நாட்களாகத் தக்காளி பயிர்ச்செய்கை என்ற போர்வையில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, பொலிஸ் அதிகாரிகள் சிலர் இணைந்து கஞ்சா செடிகளை தீ வைத்து எரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சூரியவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM