கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியில் மாபோல பிரதேசத்தில் சட்டவிரோதமாக முச்சக்கரவண்டி ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 9 பேர் இன்று திங்கட்கிழமை (28) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
வத்தளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெல்லம்பிட்டி, தெமட்டகொடை, முகத்துவாரம் மற்றும் கெரவலப்பிட்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 18 முதல் 22 வயதுக்குட்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 9 முச்சக்கரவண்டிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் நீண்ட நாட்களாக முச்சக்கரவண்டி ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பரிசோதனைக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்கள் மது போதையில் இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் வெலிசறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக வத்தளை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM