(இராஜதுரை ஹஷான்)
கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை புகையிரத சேவை திங்கட்கிழமை (28) முதல் ஆரம்பமாகவுள்ளது. வடக்கு புகையிரத சேவை இன்று முதல் வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் புகையிரத குறுக்கு வீதிகளை பயன்படுத்தும் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் புகையிரத திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
இந்திய நிதியுதவியுடன் மஹவ- ஓமந்தை புகையிரத பாதை புனரமைப்பு கருத்திட்டம் 2019.11.29 ஆம் திகதி ஆரம்பமானது. கட்டம் கட்டமாக அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு முதல் காலப்பகுதியில் அபிவிருத்தி பணிகளுக்காக கோட்டை – காங்கேசன்துறை புகையிரத சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
அபிவிருத்தி பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் கொழும்பு கோட்டை காங்கேசன்துறை புகையிரத சேவை இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளது. வடக்கு புகையிரத சேவை இன்று முதல் வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் புகையிரத குறுக்கு வீதிகளை பயன்படுத்தும் பொது மக்கள் மிகவும் அவதானத்துடன் புகையிரத திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
இதற்கமைய இன்று காலை 05.45 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து காங்கேசன்துறை நோக்கி விசேட புகையிரதம் ஒன்று புறப்படவுள்ள நிலையில் பிற்பகல்.1.30 மணிக்கு காங்கேசன்துறை புகையிரத நிலையத்தை சென்றடையும்.
செவ்வாய்க்கிழமை (29) காலை 10.30 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து புறப்படும் புகையிரதம் மாலை 06.30 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்தை வந்தடையும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM