ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடையவில்லை தோற்கடிக்கப்பட்டோம்; சஜித் வெற்றி பெறுவதை ரணில் விரும்பவில்லை - எஸ்.எம்.மரிக்கார்.

Published By: Sethu

27 Oct, 2024 | 11:43 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடையவில்லை, தோற்கடிக்கப்பட்டோம். சஜித் பிரேமதாச ஜனாதிபதியாகுவதை ரணில் விக்கிரமசிங்க விரும்பாததால் திட்டமிட்ட வகையில் நெருக்கடிகளை ஏற்படுத்தினார். ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களித்த 20 இலட்ச ஐக்கிய தேசியக் கட்சியினர் பொதுத்தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

தெஹிவளை பகுதியில் சனிக்கிழமை (26) இரவு இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் தோல்வியடையவில்லை.  திட்டமிட்ட வகையில் தோற்கடிக்கப்பட்டோம். நடுத்தர மக்களின் நலன் பற்றி பேசும் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக கூடாது என்ற நோக்கத்தில் தான் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டார். தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்கவுடன் ஒன்றிணைந்து சஜித் பிரேமதாசவை தோற்கடித்தார்.

ஜனாதிபதித் தேர்தலின் போது நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் ஜனாதிபதி மறந்து விட்டார். ராஜபக்ஷர்கள் உகண்டாவில் மறைத்து வைத்துள்ள நிதியை இலங்கைக்கு கொண்டு வருவதாக  குறிப்பிட்டனர். உகண்டா விவகாரம் தேர்தல் மேடை பிரச்சாரம் மாத்திரமே என்று தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

 சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை மறுசீரமைப்பதாகவும், உணவு மற்றும் சுகாதார சேவைகளுக்கு விதித்துள்ள வெற் வரியை இரத்து செய்வதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேர்தல் பிரச்சாரத்தின் போது குறிப்பிட்டார். ஆனால் தற்போது சர்வதேச நாணய நிதிய செயற்திட்டத்தை எவ்வித மாற்றமுமில்லாமல் முன்னெடுப்பதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார். ஆகவே ஜனாதிபதித் தேர்தலின் போது தேசிய மக்கள் சக்தி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் மறக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் 20 இலட்சம் ஆதரவாளர்கள் வாக்களித்தார்கள். அவர் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை. ஆகவே ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க வேண்டும்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த கோட்டபய ராஜபக்ஷ இரண்டு ஆண்டுகளில் பதவி துறந்தார்.அரசியல் அனுபவமில்லாத கோட்டபய ராஜபக்ஷ எடுத்த தவறான தீர்மானங்களினால் நாடு பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டது. இந்நிலைமை மீண்டும் தோற்றம் பெற கூடாது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஊழல்வாதிகளை தண்டிப்பதாக குறிப்பிடுகிறார். இந்த கொள்கைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்;...

2025-02-18 03:55:17
news-image

சுழிபுரத்தில் கோடாவுடன் ஒருவர் கைது!

2025-02-18 03:49:47
news-image

தமிழ் இளைஞர் தோட்ட உத்தியோகஸ்த்தரால் நாய்களை...

2025-02-18 03:47:27
news-image

எமது அரசாங்கத்தில் ஆரம்பித்தவற்றை தேசிய மக்கள்...

2025-02-18 03:39:40
news-image

அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்கள் அரசாங்கத்துக்கு...

2025-02-18 03:58:04
news-image

ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்;...

2025-02-18 03:21:04
news-image

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின்...

2025-02-18 01:26:35
news-image

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எந்த தரப்பினரையும்...

2025-02-17 21:38:57
news-image

ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கு...

2025-02-17 21:37:41
news-image

நிபந்தனைகள் இன்றி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் இணைவு...

2025-02-17 17:45:28
news-image

வரவு - செலவுத் திட்டத்தின் மீதான...

2025-02-17 21:38:19
news-image

நாணய நிதியத்தின் பணயக் கைதிகள் போன்று...

2025-02-17 21:37:56