அனுரகுமார அரசாங்கம் மூன்று மாதங்கள் கூட நீடிக்காது – ரணில்

Published By: Rajeeban

27 Oct, 2024 | 07:26 PM
image

இந்த அரசாங்கம் மூன்று மாதங்களிற்கு மேல் நீடிக்கும் என நான் நினைக்கவில்லை.மூன்று வாரங்கள் கூட நீடிக்காது என முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்

எனக்கும் பெரும்பான்மை இருக்கவில்லை அனுரகுமார திசநாயக்கவிற்கும்  பெரும்பான்மையில்லை என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க அப்படியென்றால் எங்கள் இருவருக்கும் இடையில்   என்ன வித்தியாசம் என கேள்வி எழுப்பியுள்ளார்.

நீர்கொழும்பில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

தேர்தலில் தோல்வியடைந்தால் என்னை வீட்டிலிருக்குமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார் எனக்கு பெரும்பான்மையானவர்கள் வாக்களிக்கவில்லை என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன்,நான் பெரும்பான்மை இ;ல்லாத முன்னாள் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க பெரும்பான்மை இல்லாத ஜனாதிபதி

நான் சமையல்எரிவாயு சிலிண்டருக்கு வாக்களிக்குமாறு கோருவதற்காக உங்கள் முன்னால் வந்துள்ளேன்.

நாடு வீழ்ச்சியடைந்த போதுபொறுப்பேற்க எவரும் இருக்கவில்லை. சஜித்தும் இல்லை அனுரவும் இல்லை.

பிரதமராவதற்கு எவரும் இருக்கவில்லை.

ஒருநாள் நிமால்லான்ச பிரதமராக தயாரா என டி என்னிடம் கேட்டார் நான் எப்படி என வினவினேன்.

அதற்கு அவர் அனைவரும் இதனை ஏற்றுக்கொள்வார்கள் என தெரிவித்தார்,அதன் பின்னர் நான் ஜனாதிபதியை சந்திக்கசென்று சவாலை ஏற்றுக்கொண்டேன்.

அந்த சமயம ஜனாதிபதி பதவியை துறந்தவேளை நாடாளுமன்றம் சுற்றிவளைக்கப்பட்ட வேளை எவரும் இருக்கவில்லை,தற்போது தலைமைத்துவத்தை கோரும் அனைவரும் தப்பியோடினார்கள்.

நாங்கள் இராணுவத்தை பயன்படுத்தி இந்த நாட்டை காப்பாற்றினோம்.

மக்கள் அனுரகுமாரதிசநாயக்க மூன்று மாதங்களிற்கே பதவி வகிப்பார் என தெரிவிக்கின்றனர்.நான் அவ்வாறு தெரிவிக்கவில்லை.அவர் தனது பதவியை தொடரவேண்டும்.அவரது கட்சியிலிருந்து அரசியல் குற்றவியல் பிரேரணை கொண்டுவரப்படுமா தெரியாது. அவ்வாறான விடயங்களை செய்யக்கூடாது.

ஆனால் அவர்களின் பட்டியலை பார்த்தால் இந்த அரசாங்கம்  மூன்று மாதங்கள் கூட  நீடிக்கும் என நான் நினைக்கவில்லை.மூன்று வாரங்கள் கூட நீடிக்காது.

ஆகவே நாட்டிற்கு தலைமை தாங்ககூடியவர்களிற்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்.ஆகவே நாட்டிற்கு தலைமை தாங்ககூடியவர்களிற்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்.

அனுபவசாலிகள் நாடாளுமன்றத்தில் இருந்தால் ஜனாதிபதியால் மூன்று வருடங்கள் ஆட்சி செய்ய முடியும்.

அவ்வாறான சூழ்நிலை காணப்படாவிட்டால் நாட்டில் வரிசைகள் யுகம் உருவாகும்.தற்போதைய தேங்காய் வரிசைகளிற்கு பதில் புதிய வரிசைகள் உருவாகும்.

தோல்வியடைந்தால் வீட்டில் இருக்குமாறு அனுர எனக்கு தெரிவித்தார்.நான் அதனை ஏற்றுக்கொள்கின்றேன் நான் கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டேன் எனக்காக வாக்களியுங்கள் என மக்களை கேட்டுக்கொண்டிருந்தேன்.பெரும்பான்மையானவர்கள் எனக்கு வாக்களிக்கவில்லை அதனால் நான் தோல்வியடைந்தேன். ஆனால் எங்கள் இருவருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை தானே 51வீதமானவர்கள் ஜனாதிபதிக்கு வாக்களிக்கவில்லை.

ஆகவே அவருக்கும்எனக்கும் என்ன வித்தியாசம் நான் பெரும்பான்டையில்லாத முன்னாள் ஜனாதிபதி அவர் பெரும்பான்மையில்லாத ஜனாதிபதி அவரை போல எனக்கு பெரும்பான்iயில்லை. ஆகவே இதில் என்ன விசேடமானது  நாங்கள் இருவரும் ஒரேமாதிரியானவர்கள்.

அவர் கஸ்டப்படுகின்றார் என நான் தெரிவிக்கின்றேன்,

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31
news-image

ஹர்ஷவுக்கு ஏன் கொழும்பு மாவட்ட தலைவர்...

2025-02-15 14:40:41
news-image

நுரைச்சோலை மின்னுற்பத்தி இயந்திரங்கள் மீண்டும் செயற்பட...

2025-02-15 16:34:16
news-image

தம்பகல்ல பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய...

2025-02-15 15:42:37
news-image

மிகவும் பலவீனமான ஆட்சியே இன்று நாட்டில்...

2025-02-15 15:36:36
news-image

கொழும்பு மாவட்டத் தலைவர் பதவியை தனதாக்கிக்...

2025-02-15 14:34:51
news-image

யாழ். கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூலகத்தை...

2025-02-15 16:35:56