மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் கீழே விழுந்து பலி !

27 Oct, 2024 | 11:01 PM
image

புத்தளம் தேத்தாப்பளைப் பகுதியில் 49 வயதுடைய பெண்ணொருவர் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறுதலாக வீழ்ந்து காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் உயிரிழந்துள்ளார்.  

குறித்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை (26) இரவு புத்தளம் கரம்பைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.  

தேத்தாப்பளை பகுதியிலிருந்து கரம்பை விகாரைக்கு மோட்டார் சைக்கிளில் தாயும் மகனும் சென்று வழிபட்டு விட்டு மீண்டும் வீட்டுக்குத் திரும்பிச் சென்றபோது பின்னால் இருந்த தாய் தவறுதலாக வீழ்ந்துள்ளார்.   

பின்னர் அவரது தாய் வீழ்ந்த இடத்திலிருந்து சுமார் 70 மீற்றர் தூரம் மோட்டார் சைக்கிளில் சென்ற பின்னரே தாய் மோட்டார் சைக்கிள் ஆசனத்தில் இல்லை என்பதை உணர்ந்து மோட்டார் சைக்கிளைத் திருப்பி தாயைத் தேடி சென்றுள்ளார்.  

இதன்பின்னர் தாய் வீழ்ந்து காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் அங்கிருந்தவர்களினால் உடனடியாக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.  

இதன்போது வைத்தியசாலையில் வைத்து சிகிச்சைப் பலனின்றி குறித்த தாய் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.  

புத்தளம் தேத்தாப்பளை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய பெண்ணொருவரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.  

உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தவரின் மகன் போக்குவரத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.  

குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

70 மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்தல்...

2025-02-18 11:34:40
news-image

உப்புவெளியில் இரண்டு கஜ முத்துக்களுடன் இளைஞன்...

2025-02-18 11:15:58
news-image

கட்டுகஸ்தோட்டையில் சிதைவடைந்த நிலையில் ஆணொருவர் சடலமாக...

2025-02-18 11:10:46
news-image

வெலிபென்ன பகுதியில் ஹெராயின் , துப்பாக்கி,...

2025-02-18 11:00:46
news-image

தமிழ்நாட்டுமீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர்துப்பாக்கிச்சூடு: மத்திய...

2025-02-18 10:59:10
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கல்விக்கு...

2025-02-18 10:58:57
news-image

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் நால்வர் கட்டுநாயக்கவில் கைது

2025-02-18 11:27:31
news-image

போலி விசாவை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச்...

2025-02-18 10:28:24
news-image

சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பலம் படைத்தவர்களை...

2025-02-18 10:47:04
news-image

இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய ஆகிய பகுதிகளில் ஆரோக்கியமற்ற...

2025-02-18 09:46:11
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் பலி...

2025-02-18 09:49:06
news-image

முல்லைத்தீவு பகுதியில் தகராறில் குடும்பஸ்தர் ஒருவர்...

2025-02-18 09:09:26