ஈச்சங்குளம் பொலிஸாரால் முதிரை மரக்குற்றிகள் மடக்கி பிடிப்பு (வீடியோ இணைப்பு)

Published By: Raam

04 May, 2017 | 12:35 PM
image

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸாரால் பாரவூர்தியில் மறைத்து கடத்தப்பட இருந்த முதிரை மரக்குற்றிகள் இன்று (04) காலை 7.30 மணியளவில்  மீட்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

மடு காட்டுப்பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கடத்திச்செல்லப்பட இருந்த நிலையில் ஈச்சங்குள பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸ் பரிசோதகர் சுபாஷ் ஆரியரட்ன தலைமையில் உதவி பொலிஸ் பரிசோதகர் விஜயரத்ன , பொலிஸ் சாஜன் அமரசிங்க சமந்த,பொலிஸ் கான்ஷ்டபில்களான  நிர்பான், விதான, சந்திரவம்ச, நிஷால், பிரதீப், கருணாரட்ன, கண்ணங்கர, பாரதிராஜா, பீரிஸ், மதுர, அஜந்தன் ஆகியோர் புதுக்குளம் பகுதியில் வைத்து பாரவூர்தியை வழி மறித்து சோதனையிட்ட போது சுமார் 10 லட்சம் பெறுமதி வாய்ந்த 29 முதிரை  மரக்குற்றிகள் எருவிற்குள் மறைத்து கொண்டு செல்ல இருந்ததை கண்டறிந்துகொண்டனர். 

இதனையடுத்து பாரவூர்தியில் இருந்த  ஜோன்ஜெராட் (வயது.37) , ராசரட்ணம் (வயது.  48) சாரதி உட்பட இருவரை கைது செய்துள்ள ஈச்சங்குளம் பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்டமா அதிபரின் ஆலோசனையை தற்காலிகமாக இடைநிறுத்துவது...

2025-02-15 20:32:09
news-image

இன்றைய வானிலை

2025-02-16 06:19:25
news-image

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின்...

2025-02-15 16:38:58
news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55