கோடிக்கணக்கான பாஹுபலி ரசிகைகளுள் ஒருவரான தெலுங்கு பெண் எழுத்தாளர் ரஜினி சகுந்தலா, பாஹுபலி இரண்டாம் பாகத்தை முன்னிட்டு விசேடமாக சேலையொன்றை வடிவமைத்து அணிந்துகொண்டமை சமூக வலைதளங்களில் பிரசித்தமாகி வருகிறது.
பாஹுபலி இரண்டாம் பாகம் வெளியாகவிருந்ததைக் கொண்டாடும் வகையில் ரஜினி மற்றும் அவரது தோழியர் சிலர், பிரபாஸ் மற்றும் அனுஷ்கா தோன்றும் ஒரு காட்சியை சேலை தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் மூலம் சேலையில் வடிவமைத்து, பாஹுபலி வெளியான அன்று அவற்றை அணிந்துகொண்டனர்.
முதலில், நெருங்கிய தோழியர்களுக்கிடையே வினியோகிக்கவென ஐம்பது சேலைகளை மட்டுமே தயாரித்து வாங்கிக்கொண்ட ரஜினி, தோழியருடன் அந்தச் சேலைகளை அணிந்துகொண்டு புகைப்படம் பிடித்து அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றினார்.
அதைக் கண்ட பலரும் தமக்கும் அது போன்ற சேலைகளை வாங்கித் தருமாறு கேட்கவே, அடுத்து 500 சேலைகள் தயாரிக்கப்பட்டன. தற்போது, இதுவே ஒரு புதிய போக்காக மாறி, தெலங்கானா மற்றும் இந்தியாவின் பல பகுதிகளிலும் பாஹுபலி சேலைகள் விரும்பி அணியப்பட்டு வருகின்றன. இதனால், பாஹுபலி சேலைகளின் விற்பனையும் அதிகரித்து வருகிறது.
இதற்கான காப்புரிமை எதையும் தான் வாங்கவில்லை என்று கூறும் ரஜினி, இதை ஒரு வியாபாரியாக இல்லாமல் ஒரு ரசிகையாகவே தயாரித்து அணிந்துகொண்டேன் என்றும் கூறுகிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM