பொலிஸ் அதிகாரிகளிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபர் கீழே தவறி வீழ்ந்து உயிரிழப்பு

25 Oct, 2024 | 03:51 PM
image

அம்பாந்தோட்டை, திஸ்ஸமஹாராம, கச்சேரியகம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பொலிஸ் அதிகாரிகளிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபரொருவர் கீழே தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்தனர். 

அம்பாந்தோட்டை, வீரவில பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

அம்பாந்தோட்டை, திஸ்ஸமஹாராம, கச்சேரியகம பிரதேசத்தில் இனங்காணாத நபர்கள் சிலர் புதையல் தோண்டுவதாக திஸ்ஸமஹாராம பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் புதையல் தோண்டிய சந்தேக நபர்களைக் கைது செய்ய முயன்ற போது சந்தேக நபர்கள் பொலிஸ் அதிகாரிகளிடமிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.

இதன்போது, அங்கிருந்த சந்தேக நபரொருவர் கீழே தவறி வீழ்ந்து மயங்கியுள்ளார்.

பின்னர், பொலிஸ் அதிகாரிகள் அனைவரும் மயங்கிய சந்தேக நபரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர். 

உயிரிழந்த சந்தேக நபர் நீண்ட நாட்களாக சுகயீனமுற்று இருந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தப்பிச் சென்ற ஏனைய சந்தேக நபர்களைக் கைது செய்வது தொடர்பில் திஸ்ஸமஹாராம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கும்...

2025-02-06 20:42:13
news-image

''நடுவே பாய வேண்டாம்'' பிரதி சபாநாயகரை...

2025-02-06 19:11:52
news-image

கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில்...

2025-02-06 14:33:26
news-image

புதிய முப்படைத் தளபதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர் 

2025-02-06 19:24:44
news-image

விசர்நாய்க்கடி நோய் உயிரிழப்புக்கள் வீழ்ச்சி ;...

2025-02-06 13:33:37
news-image

கொழும்பு லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளது

2025-02-06 18:56:37
news-image

வளி மாசடைதல் காரணமாக வருடாந்தம் சுமார்...

2025-02-06 18:41:20
news-image

சபாநாயகர், பிரதி சபாநாயகரைச் சந்தித்தார் துருக்கித்...

2025-02-06 18:19:22
news-image

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் காட்டு யானைகளின்...

2025-02-06 17:23:17
news-image

சிவனொளி பாதமலைக்கு யாத்திரை சென்றவர் சடலமாக...

2025-02-06 16:42:20
news-image

கொழும்பு - காக்கைதீவு பகுதியில் லயன்...

2025-02-06 16:41:19
news-image

பட்டாபுரம் கிராமத்தில் நீர் நிலையிலிருந்து ஆணின்...

2025-02-06 16:46:27