(இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதித் தேர்தல் போது பிரச்சாரங்களுக்காக வேட்பாளர்கள் செலவு செய்த செலவுகள் தொடர்பான விபரங்களை அறிந்துக் கொள்ளும் உரிமை நாட்டு மக்களுக்கு உண்டு. ஆகவே சமர்ப்பிக்கப்பட்டுள்ள செலவினங்கள் தொடர்பான விபரங்களை காட்சிப்படுத்தும், இடம் மற்றும் திகதி இன்று அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
பொதுத்தேர்தலுக்கான பணிகள் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றன. தேர்தல் செலவினங்கள் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
மாவட்டங்களின் நிலப்பரப்பு மற்றும் சனத்தொகை, தேர்தல் தொகுதிகளில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை மற்றும் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் யோசனைகளுக்கு அமைவாகவே தேர்தல் செலவுத் தொகை தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகவே தேர்தல் பிரச்சார செலவுத் தொகை மாவட்டத்துக்கு மாவட்டம் வேறுப்படும்.
தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் தேர்தல் பிரச்சார செலவுகள் தொடர்பிலான குறிப்புக்களை முறையாக பேண வேண்டும். முடிவுகள் வெளியாகி 21 நாட்களுக்குள் செலவினம் தொடர்பான விபரங்களை ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்க வேண்டும். செலவுகளை சமர்ப்பிக்காவிடின் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 35 வேட்பாளர்கள் உரிய காலத்தில் பிரச்சார செலவினங்கள் தொடர்பிலான விபரத் திரட்டை உரிய காலத்தில் சமர்ப்பித்தனர். 3 வேட்பாளர்கள் தாமதமான நிலையில் தான் விபரங்களை சமர்ப்பித்தனர்.10 அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சார செலவுகளை சமர்ப்பிக்கவில்லை.
ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் போது வேட்பாளர்கள் செலவு செய்த செலவுகள் தொடர்பான விபரங்களை அறிந்துக் கொள்ளும் உரிமை நாட்டு மக்களுக்கு உண்டு. ஆகவே சமர்ப்பிக்கப்பட்டுள்ள விபரங்களை காட்சிப்படுத்தும், இடம் மற்றும் திகதி தொடர்பான விபரங்கள் இன்று அறிவிக்கப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM