bestweb

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றால் அதன் தரவுகள் பொய் என்பதை அரசாங்கம் நிரூபிக்க வேண்டும் ; ராஜித்த

22 Oct, 2024 | 09:51 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்) 

உயிர்த ஞாயிறு தாக்குதல்  விசாரணை அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றால் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தரவுகள் பிழை என்பதை அரசாங்கம்  உறுதிப்படுத்த வேண்டும். அதனால் ஓய்வுபெற்ற நீதி அரசர்களைக்கொண்ட குழுவினால் தயாரிக்கப்படும் விசாரணை அறிக்கையை அரசியல் நோக்கத்துக்காக தயாரிக்கப்பட்டது என எவ்வாறு தெரிவிக்க முடியும் என கேட்கிறோம் என புதிய ஜனநாயக முன்னணியின் களுத்துறை மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.  

கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை (21)  இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,  

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தி, அதன் சூத்திரதாரிகளை சட்டத்துக்கு முன்னால் நிறுத்துவதாக ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தெரிவித்திருந்தது. அநுரகுமார மீது நம்பிக்கை வைத்து கர்தினால் மல்கம் ரன்ஜித் ஆண்டகையும் மறைமுகமாக அநுரகுமாரவுக்கு ஆதரவளிக்குமாறு தெரிவித்து வந்தார்.   

ஆனால் உயிர்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தற்போது வெளிவந்திருக்கும் ஓய்வு பெற்ற முன்னாள் நீதி அரசர் அல்விஸ் தலைமையிலான குழுவின் விசாரணை அறிக்கையில் 17பேருக்கு எதிராக வழக்கு தொடுக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. 

ஆனால் இந்த 17பேரில் ஒருவர்தான் குற்றப்புலனாய்வு பிரிவின் முன்னாள் சிரேஷ் பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன. இவர்தான் தாக்குதல் தொடர்பில் இந்தியாவின் புலனாய்வு பிரிவு, தெளிவான தகவல் அனுப்பி இருந்தபோதும், அதுதொடர்பில் நடவடிக்கை எடுக்க தவறி இருக்கிறார்.  

ஆனால் அநுரகுமார திஸாநாயக்க பதவிக்கு வந்ததுடன்  பொது மக்கள் பாதுகப்பு அமைச்சின் செயலாளராக நியமித்து, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் பாெறுப்பையும் அவருக்கே வழங்கி இருக்கிறது. இவ்வாறான நபரிடமிருந்து உண்மையான விசாரணையை எதிர்பார்க்க முடியுமா என கேட்கிறோம். 

அதேநேரம் அநுரகுமார திஸாநாயக்க பதவிக்கு வந்த பின்னர் வழங்கிய நியமனங்கள் தொடர்பில் விமர்சனங்கள் இருக்கின்றன. அந்த நபர்களின் பின்னணி தொடர்பில் தேடிப்பார்க்காமலேயே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அனுபவம் இல்லாமையே இதற்கு காரணமாகும். 

அத்துடன் உதய கம்மன்பிலவினால் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அது அரசியல் நோக்கத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது எனவும் அமைச்சரவை பேச்சாளர் விஜித்த ஹேரத் தெரிவித்திருக்கிறார்.  

ஓய்வுபெற்ற முன்னாள் நீதியரசர்களைக் கொண்ட குழுவொன்றை அமைத்து விசாரணை மேற்கொண்டு தயாரிக்கப்படும் அறிக்கை அரசியல் நோக்கம் கொண்டது என தெரிவிக்குமானால் இதற்கு முன்னர் தயாரிக்கப்பட்ட விசாரணை அறிக்கைகளையும் அவ்வாறு தெரிவித்தால், தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்போது நீதி கிடைக்கப்போகிறது. இந்த அரசாங்கமும் புதிய விசாரணை ஒன்றை ஆரம்பித்து அதனை 5 வருடங்களுக்கு இழுத்துக்கொண்டு செல்லும் நிலைதான் ஏற்படும்.

அதேநேரம் வெளியிடப்பட்டிருக்கும் விசாரணை அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றால், அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தரவுகள் பிழை என்பதை அரசாங்கம் நிரூபிக்க வேண்டும்.

எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தொடர்ந்து விசாரணைகளை நடத்தி காலத்தை கடத்தாமல் விசாரணை அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விடயங்களை அடிப்படையாக்கொண்டு, இந்த தாக்குதலின் பின்னணியை கண்டு பிடிக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற...

2025-07-11 13:32:42
news-image

மனைவியை கத்தியால் குத்தி காயப்படுத்திய உப...

2025-07-11 13:16:16
news-image

போதைப்பொருள் தகராறு ; கத்திக்குத்துக்கு இலக்காகி...

2025-07-11 13:03:54
news-image

ஹொரணையில் சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் சந்தேக...

2025-07-11 12:10:56
news-image

சாதாரண தர பரீட்சையில் 13 392...

2025-07-11 12:33:21
news-image

மல்வத்துஹிரிபிட்டியவில் சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் சந்தேக...

2025-07-11 11:49:40
news-image

மன்னார், கதிர்காமத்தில் இடம்பெற்ற வாகன விபத்துகளில்...

2025-07-11 11:46:08
news-image

இலங்கையின் சுகாதாரத்துறை முன்னேற்றம், ஊடக துறையின்...

2025-07-11 11:12:07
news-image

ஐஸ் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர்கள் நால்வர் கைது!

2025-07-11 10:55:07
news-image

எசல பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 7,067...

2025-07-11 10:57:43
news-image

மட்டக்களப்பில் தெய்வ உருவெடுத்து ஆடியவர் மயங்கி...

2025-07-11 10:00:35
news-image

க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் குறித்து முக்கிய...

2025-07-11 10:18:48