இஸ்ரேலில் வேலை தேடுபவர்களிடம் போலியான தொலைபேசி அழைப்புகள் மூலம் பணமோசடி செய்யும் நடவடிக்கை குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா இது தொடர்பில் தெரிவிக்கையில்,
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊழியர்கள் என்ற போர்வையில் இஸ்ரேலில் வேலை வாய்ப்பு எதிர்பார்த்து விண்ணப்பித்துள்ளவர்களிடம் போலியான தொலைபேசி அழைப்புகள் மூலம் தொடர்பு கொண்டு விண்ணப்பத்திற்காக மேலதிகமாக 14,700 ரூபா செலுத்த வேண்டும் என கூறி மோசடி செய்துள்ளதாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இந்த தொலைபேசி அழைப்புகளுக்கும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கும் எந்தவித தொடர்புகளும் இல்லை.
இஸ்ரேலில் வேலை வாய்ப்பு எதிர்பாரத்து விண்ணப்பிப்பதற்காக ஏற்கனமே பணம் செலுத்தியவர்கள் மீள பணம் செலுத்த தேவையில்லை.
எனவே, இவ்வாறான போலியான தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.
இவ்வாறான தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் முறையிடுவதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 1989 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுமாறு அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM