அரசாங்கத்தினால் இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி பணிகளை இன்னும் சில மாதங்களில் மீளவும் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம். இதன்போது நாட்டிற்கு தீங்கான அனைத்து அம்சங்க ளும் ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்டு மீள்திருத்தம் செய்யப்படும். அதன் பின்னரே துறைமுக நகர் திட்டம் ஆரம்பிக்கப்படும் என சர்வதேச வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி இராஜங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.
மேலும் கொழும்பு - கண்டி அதிவேக பாதையின் பணிகள் மூன்று வருடங்களில் பூர்த்தி செய்யப்படும். யாழ்ப்பாணம் வரையிலான அதிவேக பாதை ஐந்து வருடங்களில் பூரத்தி செய்யப்பட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு இராஜங்க அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
முன்னைய ஆட்சியின் போது இலங்கையில் முதலீடுகள் செய்வதற்கு வெளிநாடுகளிலிருந்து எவரும் வருகை தரவில்லை. ஆனாலும் தற்போது பல தரப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். அனைத்து துறைகளிலும் முதலீடுகளை துரிதப்படுத்தவுள்ளோம். திருகோணமலையில் இரும்பு மற்றும் வாகன தகடுகளை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம். அத்துடன் திருகோணமலை துறைமுகத்தை புனரமைத்து பல்வேறு முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளோம்.
மேலும் ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தை முதலீட்டு ஊக்குவிப்பு வலயமாக மாற்றியமைக்க உள்ளோம். குறித்த வலயங்களில் வாகன தயாரிப்புகளுக்கான ஏற்பாடுகளை பூர்த்தி செய்யவுள்ளோம். அம்பாந்தோட்டை துறைமுகத்தினால் நாட்டுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
தற்போது இலங்கையுடன் முதலீடு செய்வதற்கு மெட்ரோ ரயில் தயாரிப்பு நிறுவனங்கள் வருகை தருவதாக எம்மிடம் அறிவித்துள்ளன. அதுமாத்திரமின்றி தற்போது இலங்கை நிறுவனங்களை ஏனைய நாடுகளில் முதலீடுகள் மேற்கொள்வதற்கு தயாராக உள்ளன.
பொருளாதார ரீதியாக பல்வேறு மாற்றங்களை நாம் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம். மேலும் ரூபாவின் பெறுமதி குறைவதனை பற்றி பேசுகின்றனர். ரூபாவின் பெறுமதி கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதே சிறந்ததாக அமையும்.
இந்நிலையில் முன்னைய ஆட்சியின் போது ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி பணிகள் ஒன்றும் நிறுத்தப்படவில்லை. பல்வேறு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும் சில அபிவிருத்தி பணிகள் எதிர்வரும் காலங்களில் ஆரம்பிக்கப்படும்.
அரசாங்கத்தினால் இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி பணிகளை இன்னும் சில மாதங்களில் மீளவும் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம். இதன்போது நாட்டிற்கு கேடான அனைத்து அம்சங்களும் ஒப்பந்ததிலிருந்து நீக்கப்பட்டு மீள்திருத்தம் செய்யப்படும். அதன் பின்னரே துறைமுக நகர் திட்டம் ஆரம்பிக்கப்படும் . சீன அரசாங்கத்துடன் எமக்கு எந்தவொரு கோபங்களும் கிடையாது. அவர்களிடமிருந்து பெற முடியுமான அனைத்து உதவிகளையும் நாம் பெற்றுக்கொள்வோம்.
துறைமுக அபிவிருத்தி பணிகளின் போது இலங்கை அரசாங்கத்திற்கு ஐம்பது சதவீதம் உரித்தாகும் வகையில் திட்டம் ஆரம்பிக்கப்படும். இதேவேளை கொழும்பு - கண்டி அதிவேக பாதையின் பணிகள் மூன்று வருடங்களில் பூர்த்தி செய்யப்படும். அதிலிருந்து சுமார் ஐந்து வருடங்களில் யாழ்ப்பாணம் வரையிலான அதிவேக பாதை பூர்த்தி செய்ய முடியும். இதற்கான ஏற்பாடுகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM