கரந்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அமரகீர்த்திகம பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளொன்று துவிச்சக்கரவண்டியுடன் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கரந்தெனிய பொலிஸார் நேற்று சனிக்கிழமை (19) தெரிவித்தனர்.
கரந்தெனிய, அமரகீர்த்திகம பிரதேசத்தில் வசிக்கும் 81 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பொரகந்தவிலிருந்து அமரகீர்த்திகம நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் எதிர்த்திசையிலிருந்து வந்த துவிச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்தவர் படுகாயமடைந்து பொரகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக பலப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் பலப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் கரந்தெனிய பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM