வவுனியாவிலுள்ள அரிசி ஆலை ஒன்றில் 160 நெல் மூட்டைகள் திருட்டு போயுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா நாகர் இலுப்பைக்குளம் பகுதியிலுள்ள அரிசி ஆலை ஒன்றில் கடந்த மாதம் 23 திகதியிலிருந்து 30 ஆம் திகதிக்குற்பட்ட காலப்பகுதியில் 160 நெல் மூட்டைகளும் 6 குறுணல் மூட்டைகளும் திருட்டுப் போயுள்ளதாக அரிசி ஆலை உரிமையாளர் நேற்று (02) வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டார்.
இதையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் அரிசி ஆலையில் கடமையாற்றிய பாதுகாப்பு உத்தியோகத்தரை கைது செய்து மேற்கொண்ட விசாரணைகளின்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து குறிப்பிட்ட சில நெல் மூட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளின் பின்னர் மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM