சொத்துக்காக 90 வயதிலும் திருமண ஆசை

Published By: Robert

12 Jan, 2016 | 04:56 PM
image

தன்னிடமுள்ள சொத்தை பெறும் ஆசையில் தொந்தரவு செய்யும் பிள்ளைகளிடம் இருந்து விடுதலை பெறுவதற்காக 90 வயது முதியவரொருவர் அவருக்கு பொருத்தமான மணமகளை தேட ஆரம்பித்துள்ளார்.

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பிரபல வங்கியில் மூத்த முகாமையாளராக பணியாற்றிய மன்க்லால்(90) முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் பணி ஓய்வு பெற்றுள்ளார். அப்போது அவருக்கு அளிக்கப்பட்ட பணத்திலிருந்து 50 இலட்சம் ரூபாயை நிரந்தர வைப்பு நிதியாக போட்டுவைத்து, தனது இரு மகன்கள் மற்றும் இரு மகள்களை அந்த தொகைக்கான வாரிசுகளாக நியமித்திருந்தார்.

கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்னர் மன்க்லாலின் மனைவி உயிரிழந்தார். அன்றிலிருந்து பட்டமரமாக தனிமையில் வாடிவரும் அவரை அண்மைக்காலமாக மகன்களும், மகள்களும் இம்சிக்க தொடங்கியுள்ளனர். மகளுக்கு சொந்தமான ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் அவரிடம் இருந்து அந்த வீட்டுக்கு வாடகையாக மாதந்தோறும் 17,000 ரூபாயை அந்த மகள் வாங்கி விடுகிறார்.

அவருக்கு உணவு கொடுக்கும் செலவுக்கு என்று 6,000 ரூபாயை ஒரு மகன் வாங்கி விடுகிறாராம். இப்படி, கறவை மாடாக மட்டும் தன்னை பயன்படுத்திக்கொள்ளும் மகள்கள் மற்றும் மகன்களின் போக்கை கண்டு கவலையடைந்த மன்{க்லால், தன்னை கவனித்துக் கொள்ள யாருமே இல்லையே..? என்ற தனிமை ஏக்கத்தில் துவண்டுப்போய் உள்ளார்.

மாதாமாதம் என்னிடம் பணம் வாங்க மட்டும் வந்துப்போகும் பிள்ளைகள், நான் எப்போது சாவேன்? எனது நிரந்தர வைப்பு நிதியான 50 இலட்சம் ரூபாயை பங்குப்போட்டுக் கொள்ளலாம் என காத்திருக்கின்றனர் என இவர் வேதனையோடு தெரிவித்துள்ளார்.

தன்னைப்பற்றி கவலைப்படாத பிள்ளைகளுக்கு தனது வாழ்நாள் சேமிப்பான அந்ததொகை போய் சேர்ந்து விடக்கூடாது என்று முடிவெடுத்த அவர், தற்போது தன்மீது அன்பும், பாசமும் செலுத்தி, தன்னை அக்கறையுடன் கவனித்துக்கொள்ளக்கூடிய தகுந்த வாழ்க்கைத் துணையை தேடி வருகிறார்.

இதற்காக, முதியோர்களுக்கு திருமணப்பொருத்தம் ஏற்படுத்தித்தரும் ஒரு நிறுவனத்தை அணுகியுள்ள மன்க்லால், தனது மனதுகெற்ற மணமகளுக்காக காத்திருக்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்