நேற்று நாவலப்பிட்டியிலிருந்து நானுஓயா நோக்கி பயணித்த ரயில் தடம்புரள்வு

16 Oct, 2024 | 12:06 PM
image

நாவலப்பிட்டியிலிருந்து நானுஓயா நோக்கி பயணித்த ரயில் தலவாக்கலை மற்றும் வட்டகொட ரயில் நிலையத்திற்கு இடையில் நேற்று செவ்வாய்க்கிழமை (15) மாலை தடம் புரண்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.

தடம் புரண்ட ரயிலை  சீர் செய்ய  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.   

இதன்காரணமாக நேற்று  (15)  இரவு பதுளை மற்றும் கொழும்பு கோட்டையில் இருந்து பயணிக்கும் தபால் ரயில்கள்  சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் தாமதமாகச் சென்றதாக நாவலப்பிட்டிய ரயில்  கட்டுப்பாட்டு அறையின் பேச்சாளர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right