சர்வதேச நாணயநிதியத்தின் சீர்திருத்த பாதையில் பயணியுங்கள் - ஊழலிற்கு எதிராக போராடுங்கள் - வர்த்தக சமூகத்தினர் மத்தியில் ஜூலிசங்

Published By: Rajeeban

15 Oct, 2024 | 01:10 PM
image

பொருளாதார சீர்திருத்தங்கள் கடினமானவை ஆனால் இலங்கை சரியான பாதையில் பயணிக்கின்றது என தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங் சர்வதேச நாணயநிதியத்தின் சீர்திருத்தங்களின் பாதையில் செல்லவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் அமெரிக்க இலங்கை வர்த்தக பேரவையின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

எதிர்காலத்தை கட்டியெழுப்புவது இலகுவான விடயமல்ல.

சர்வதேச நாணயநிதியத்தின் ஈஎவ்எவ் திட்டம் பொருளாதார ஆட்சிமுறை சீர்திருத்தங்களையும் ஊழலிற்கு எதிரான போராட்ங்களையும்  கோருகின்றது.

பொருளாதார சீர்திருத்தங்கள் கடினமானவை ஆனால் இலங்கை சரியான பாதையில் பயணிக்கின்றது.

எனக்கு புதிய ஜனாதிபதி புதிய பிரதமரை சந்தித்து இந்த விடயங்கள் குறித்து உரையாடுவதற்கான சந்தர்ப்பம் சமீபத்தில் கிடைத்தது.

சிலநாட்களிற்கு முன்னர் யுஎஸ்எயிட்டின் நிர்வாகி சமந்தா பவர் பொருளாதார சீர்திருத்தங்களின் அவசியம் குறித்தும்இலங்கையின் பொருளாதாரத்தின் முக்கியமான பகுதியான சிறிய நடுத்தர தொழில்துறையினருக்கு நாம் எவ்வாறு உதவலாம் என்பது குறித்தும் உங்கள் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடினார்.

கடந்த மாதம் வாக்குபெட்டிகள் மூலம் இலங்கை மக்கள் மாற்றத்திற்கான அழைப்பை விடுத்ததை நாம் பார்த்தோம்.அவர்கள் நாட்டின் எதிர்காலத்திற்கான தங்களுடைய எதிர்பார்ப்பை நோக்கை வெளியிட்டனர்.இதனை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு நாட்டின்  தலைவர்களிடம் உள்ளது.

அரசாங்கத்தில் உள்ளவர்களிற்கு மாத்திரமல்லாமல் வர்த்தகம்கல்வி ஊடகம் சிவில்சமூகத்தை சேர்ந்தவர்களிற்கும் இதற்கான பொறுப்புள்ளது.

அமெரிக்கா இலங்கை ஆகியவற்றின் வர்த்தகங்களிற்கு இடையிலான உறவு பலவருட பரஸ்பர நம்பிக்கைஇமற்றும் பகிரப்பட்ட மதிப்புகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த உறவுகள் தொடர்ந்து செழிப்பதற்கு இலங்கை அரசாங்கம் எதிர்வுகூறக்கூடிய நிலையான நிர்வாக முறையை உருவாக்குவது அவசியம்.

கொள்கைகள் தெளிவானதாகவும் விதிமுறைகள் சீரானதாகவும் சூழலில் சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்படும் சூழலில்இ வணிகங்கள் செழித்து வளர்கின்றன.

ஒரு நிலையான நிர்வாக அமைப்பு அதிக முதலீட்டை ஈர்க்கும் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும்இபொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும்.

அமெரிக்க இலங்கை வணிக உறவுகளின் எதிர்காலம் குறித்து நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.சர்வதேச நாணயத்தின் சீர்திருத்தங்களின் பாதையில் செல்வதன் மூலம்இஊழலிற்கு எதிராக போராடுவதன் மூலம்இஅனைவரினதும் குரல்களும் செவிமடுக்கப்படும்அனைவரும் உள்ளடக்கப்படும் எதிர்வுகூறக்கூடிய நிர்வாக அமைப்பை கட்டியெழுப்புவதன் மூலம்எங்கள் பொருளாதார கூட்டாண்மையின் முழுமையான திறனை வளர்க்க முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இயற்கை அனத்தங்களால் பாதிக்கப்பட்ட 1200 குடும்பங்களுக்காக...

2025-11-07 17:21:30
news-image

2026 மூன்றாம் காலாண்டில் டிஜிட்டல் அடையாள...

2025-11-07 17:21:27
news-image

தெங்கு பயிர்ச்செய்கையை மேம்படுத்த வடக்கு தென்னை...

2025-11-07 17:13:16
news-image

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீட்டுக்...

2025-11-07 17:08:18
news-image

கிரான், பென்டுகால் பாலங்கள் அபிவிருத்திக்கு நிதி...

2025-11-07 17:09:47
news-image

இலங்கை மின்சார சபை மறுசீரமைக்கப்படும் -...

2025-11-07 17:02:58
news-image

கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான...

2025-11-07 16:56:46
news-image

மலையக மக்களுக்கு இந்திய அரசின்  குடியிருப்பு...

2025-11-07 17:00:15
news-image

செல்லப்பிராணிகள் இறந்த பின்னர் அதனை அடக்கம்...

2025-11-07 16:50:30
news-image

நவீன புகையிரதங்களை கொள்வனவு செய்ய நிதி...

2025-11-07 17:00:26
news-image

திண்ம கழிவகற்றலுக்கு நிதி ஒதுக்கீடு!

2025-11-07 16:38:58
news-image

முச்சக்கர வண்டி விபத்து ; இளைஞன்...

2025-11-07 16:40:59