ஜா-எல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏகல பிரதேசத்தில் வீதியில் பயணித்து கொண்டிருந்த நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்ட்டுள்ளதாக ஜா-எல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (14) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
ஜா-எல, ஏகல பிரதேசத்தைச் சேர்ந்த நுவன் குமார என்ற 36 வயதுடைய நபர் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
கொலை செய்யப்பட்ட நபர் உணவுப் பொதியை வாக்குவதற்காக வீதியில் பயணித்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளார்.
இதன்போது, கொலை செய்யப்பட்ட நபருக்கும் மோட்டார் சைக்கிள் செலுத்துனருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
பின்னர், கொலை செய்யப்பட்ட நபர் கற்களால் மோட்டார் சைக்கிள் செலுத்துனரை தாக்க முயன்ற போது கற்களானது அருகிலிருந்த கடை ஒன்றின் மீது மோதியுள்ளது.
இதனையடுத்து, கடையின் உரிமையாளரும் அங்கு இருந்த நபர்கள் சிலரும் கொலை செய்யப்பட்ட நபருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, அங்கு இருந்த நபர்கள் சிலர் கொலை செய்யப்பட்ட நபரை கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.
காயமடைந்தவர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்ட நபரை காப்பாற்ற முயன்ற மேலும் மூவர் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜா-எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM