ஓஸ்கர் விருதினை வென்ற 'ஆர் ஆர் ஆர் ' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான தெலுங்கு முன்னணி நட்சத்திர நடிகரான 'குளோபல் ஸ்டார் ' ராம்சரண் முன்னணி வேடத்தில் நடித்திருக்கும் 'கேம் சேஞ்சர்' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கேம் சேஞ்சர்' எனும் திரைப்படத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, ஜெயராம், ஸ்ரீகாந்த், சுனில், சமுத்திரக்கனி, பிரகாஷ் ராஜ், நாசர் , நவீன் சந்திரா, முரளி சர்மா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
எஸ். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைத்திருக்கிறார்.
அரசியல் விழிப்புணர்வை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் சிரீஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
ராம் சரண் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் தருணத்தில் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பட மாளிகைகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக பிரத்தயேக புகைப்படத்துடன் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ராம் சரணின் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.
இதனிடையே நடிகர் ராம் சரணின் தந்தையும், முன்னணி நட்சத்திர நடிகருமான சிரஞ்சீவி நடிக்கும் 'விஸ்வாம்பரா' எனும் திரைப்படத்தின் கிளர்வோட்டம் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது.
இதில் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 10-ஆம் திகதியன்று வெளியாகும் என் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் திரை உலகில் குறிப்பாக திரையுலக வணிகர்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டது. தந்தையும் மகனும் நடித்த திரைப்படங்கள் ஒரே திகதியில் வெளியாகிறதா..!? என அவர்கள் குழப்பமடைந்தனர்.
இந்நிலையில் ராம்சரண் நடிக்கும் 'கேம் சேஞ்சர்' எனும் திரைப்படம் திட்டமிட்டபடி ஜனவரி 10 ஆம் திகதியன்று வெளியாகும் என்றும், சிரஞ்சீவி நடித்த 'விஸ்வாம்பரா ' திரைப்படம் மே மாதம் வெளியாக கூடும் என்றும் உறுதிப்படுத்தப்படாத வணிக வட்டாரங்கள் தெரிவித்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM