கடும் மழை காரணமாக கட்டான பிரதேச செயலகத்தில் அவசர நிலை - பிரதேச செயலாளர் சுமுது அத்துகோரள

Published By: Digital Desk 2

13 Oct, 2024 | 07:00 PM
image

நாடு முழுவதும் பெய்து வரும் அடை மழை காரணமாக கட்டானை ஊடாக பாயும் தடுகம் ஓயா பெருக்கெடுத்து ஓடுவதால் 4000 ற்கும் மேற்பட்டவர்கள்  பாதிக்கப்பட்டுள்ளதாக கட்டான பிரதேச செயலாளர்  சுமுது அத்துகோரள இன்று ஞாயிற்றுக்கிழமை (13) தெரிவித்தார்.  

சுமார் , 17 கிராம சேவையாளர்  பிரிவுகளில் 1385 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 4800 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை , இந்த அனர்த்தம் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லும் கட்டுநாயக்க – நிட்டம்புவ வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , 

நீர்கொழும்பில் இருந்து கிபுலபிடிய மற்றும் படபதுர கல்மங்கட புகையிரத ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லும் வீதியும் வெள்ள நிலைமை காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் , கொடுகொட ரோமன் கத்தோலிக்க கல்லூரி, வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்தவர்களின் முகாமாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கட்டான பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

அத்துடன், மாதுவ, கொடுகொட பிரதேசங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு , போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக இலங்கை இராணுவத்தினரின் ஆதரவுடன் படகுச் சேவை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் , தற்போதும் அப்பகுதி முழுவதும் கடும் மழை பெய்து வருகின்றதுடன், இதன் காரணமாக மடவள, மாதுவ, அரம்ப, குஸ்வல, முதுவாடிய, கொடுகொட, கோவின்ன, கிம்புலபிட்டிய, படபதுர, கல்மங்கட, பல்லேவெவ போன்ற பிரதேசங்களில் போக்குவரத்துக்கு , அந்த பகுதிகளில் வாழும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை - உஸ்பெகிஸ்தான் இடையே புதிய...

2026-07-13 11:36:24
news-image

உலகில் அதிக போக்குவரத்து நெரிசல் மிக்க...

2026-07-13 11:20:46
news-image

மட்டக்களப்பு தளவாய் வீட்டுத்திட்ட வீதியை புனரமைக்குமாறு...

2026-07-13 11:00:38
news-image

பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ;...

2026-07-13 11:13:39
news-image

இலங்கையின் அதிக வயதான பெண்களில் ஒருவரான...

2026-07-13 10:20:18
news-image

வேளாண்மைத் துறையை ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும்...

2026-07-13 09:54:26
news-image

களுத்துறை மாவட்ட செயலகத்தில் திடீர் தீ...

2026-07-13 09:56:19
news-image

சில மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பில்...

2026-07-13 09:25:14
news-image

பேராதனை, கொழும்பு ஆகிய பகுதிகளில் போதைப்பொருட்களுடன்...

2026-07-13 09:18:27
news-image

டெங்கு அபாயத்தால் மூடப்பட்டிருந்த கட்புல, அரங்கேற்றக்...

2026-07-13 09:16:08
news-image

மஹரகமவில் துப்பாக்கியுடன் இளைஞர் கைது!

2026-07-13 09:06:29
news-image

தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளும் விடங்களில்...

2026-07-13 08:53:19