(எம்.மனோசித்ரா)
பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்து பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் பிரதான கட்சிகள் அவதானம் செலுத்தி வருகின்றன. அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி பிரசாரம் உட்பட ஏனைய காரணிகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நாளை திங்கட்கிழமை (13) கூடவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் பிரதமர் தினேஸ் குணவர்தன தலைமையில் கொழும்பு - பிளவர் வீதியிலுள்ள அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
நாடளாவிய ரீதியிலுள்ள சகல தேர்தல் மாவட்டங்களினதும் தலைவர்கள் இந்த கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதன் போது பிரசாரங்களை ஆரம்பித்தல், அதற்கான தொனிப்பொருள் மற்றும் எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணியின் பெரும்பாலான வேட்பாளர்கள் மற்றும் உறுப்பினர் தமது இலக்கு பிரதான எதிர்க்கட்சியாவதாகும் என்பதாகவுள்ளது. தேசிய அரசியலில் தாம் மூன்றாவது இடத்தில் இருப்பதால் பாராளுமன்ற அதிகாரத்தைக் கைப்பற்றுவதை விட பலமான எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் என்பது அவர்களது நிலைப்பாடாக உள்ளது.
எவ்வாறிருப்பினும் பிரதமர் வேட்பாளர் ஒருவரை முன்னிருத்தி பிரசாரங்களை முன்னெடுக்காமல், எதிர்க்கட்சி தலைவர் வேட்பாளரைக் களமிறக்கினால் அது தமக்கு எதிர்மறையான ஒரு நிலைவரத்தை ஏற்படுத்தும் என்றும், பாராளுமன்ற அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது என்பதற்காகவே இவ்வாறான தீர்மானத்தை எடுப்பதாக ஆதரவாளர்கள் எண்ணக்கூடும். எனவே பிரதமர் வேட்பாளர் ஒருவரை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பது பிரிதொரு தரப்பின் நிலைப்பாடாக உள்ளது.
அதற்கமைய தினேஸ் குணவர்தனவை பிரதமர் வேட்பாளராக களமிறக்கவும் அந்த தரப்பு முன்மொழிந்துள்ளது. இது தொடர்பில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாகவே முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதற்கு தீர்மானித்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. எவ்வாறிருப்பினும் நாளைய கலந்துரையாடலில் இது தொடர்பில் தீர்மானமொன்று எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM