நால்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரியுல்ல - மீரிகம வீதியில் லொலுவாகொட பிரதேசத்தில் நேற்று (11) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நால்ல பொலிஸார் தெரிவித்தனர்.
மீரிகமவிலிருந்து கிரியுல்ல நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி இராணுவத்துக்கு சொந்தமான பஸ்ஸுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தின்போது முச்சக்கரவண்டியின் சாரதியும் அவ்வாகனத்தின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணும் காயமடைந்துள்ள நிலையில் மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், முச்சக்கரவண்டியின் சாரதி உயிரிழந்துள்ளார்.
மடுகஹவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, இராணுவத்துக்குச் சொந்தமான பஸ்ஸின் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நால்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM