இன்றைய சூழலில் இளைய தலைமுறையினர் தங்களது வாழ்க்கை நடைமுறையை மற்றும் உணவு முறையை மாற்றி அமைத்துக் கொண்டிருப்பதால் குழந்தைகளுக்கு பல்வேறு வகையினதான சிக்கல்கள் உருவாகிறது.
குறிப்பாக பத்து வயதிற்குள்ளாகவே பெண் பிள்ளைகள் பூப்படைகிறார்கள். இந்நிலையில் இவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தற்போது குழந்தைகளுக்கான நாளமில்லா உட்சுரப்பு மருத்துவ சிகிச்சை தனி பிரிவாக வளர்ச்சி அடைந்து வருகிறது என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
பிறக்கும் குழந்தைகள் அந்தந்த வயதிற்குரிய வளர்ச்சியை பெறவில்லை என்றாலோ குழந்தைகள் குறிப்பாக பெண் குழந்தைகள் விரைவில் பூப்பெய்தினாலோ குழந்தைகள் அவர்களின் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் இல்லாமல் கூடுதலாகவோ அல்லது உடற்பருமனாகவோ இருந்தாலோ அல்லது குழந்தைகள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தாலோ அவர்களுக்கான சிகிச்சையை இத்தகைய பிரிவு வைத்திய நிபுணர்கள் துல்லியமாக அவதானித்து சிகிச்சை அளிக்கிறார்கள்.
பொதுவாக குழந்தைகளின் வளர்ச்சியின் போது அவர்களுடைய உடலில் உள்ள ஹோர்மோன்களின் சுரப்பிகளில் சமச்சீரான தன்மை இருக்க வேண்டும்.
இவற்றில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அதன் காரணமாக அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். பிட்யூட்டரி, தைரொய்ட், பாரா தைரொய்ட் உள்ளிட்ட நாளமில்லா உட்சுரப்பிகளின் அமைப்பு மற்றும் செயல்பாட்டில் நிகழும் இடையூறு ஆகியவற்றை துல்லியமாக அவதானித்து, அதற்கான சிகிச்சையை அளித்து நிவாரணத்தை வழங்குவதும் இவ்வகையினதான வைத்திய நிபுணர்கள் தான். அதனுடன் பெண் பிள்ளைகள் மிக விரைவாக பூப்படைவதையும் மிகவும் தாமதமாக பூப்படைவதற்கான காரணத்தையும் கண்டறிந்து அதற்கான நிவாரணத்தையும் இவர்கள் வழங்குகிறார்கள்.
மூன்று வயது முதல் பத்து வயதிற்குள்ளாகவே இளம் வயது சர்க்கரை நோய் பாதிப்பிற்கு ஆளாகுபவர்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறார்கள்.
இவற்றில் டைப் 1 மற்றும் டைப் 2 என இரண்டு வகையினதான சர்க்கரை நோயாளிகளும் உள்ளனர். இவர்களுக்கான சிகிச்சையும் , ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைப்பதற்கான அட்டவணையையும் நாளமில்லா உட்சுரப்பியல் வைத்தியர்கள் வழங்குகிறார்கள்.
வைத்தியர் நிகில்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM