தொலைபேசி விற்பனை நிலையத்தில் திருட்டு ; இருவர் கைது

10 Oct, 2024 | 09:02 PM
image

கொழும்பு, நாரஹென்பிட்டி பிரதேசத்தில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றின் கதவை உடைத்து, உள்நுழைந்து 40 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களைத் திருடிச் சென்ற சம்பவம் தொடர்பில் இளைஞனும் யுவதியும் கைது செய்யப்பட்டுள்ளதாக நாரஹென்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

திருடியதாகக் கூறப்படும் 40 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை தன்வசம் வைத்திருந்ததாக கூறப்படும் 17 வயதுடைய யுவதியே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞன் மற்றுமொரு இளைஞனுடன் இணைந்து குறித்த விற்பனை நிலையத்தின் கதவை உடைத்து உள்நுழைந்து 40 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களைத் திருடியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்,  திருடிய பொருட்களை விற்பனை செய்வதற்கு தயாராக இருந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாரஹென்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள் மீட்பு...

2025-03-15 10:37:52
news-image

சம்மாந்துறையில் தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திய...

2025-03-15 10:18:32
news-image

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு...

2025-03-15 09:57:39
news-image

5 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக...

2025-03-15 09:43:37
news-image

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம்

2025-03-15 09:34:00
news-image

பட்டலந்த அறிக்கை குறித்து அரசாங்கம் நடவடிக்கை...

2025-03-14 17:24:29
news-image

இன்றைய வானிலை 

2025-03-15 06:23:42
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை : நாளை...

2025-03-15 03:05:55
news-image

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தோட்ட...

2025-03-15 02:56:50
news-image

பொருளாதாரத்தில் பெண்களின் முழுமையாகப் பங்கேற்பை கட்டுப்படுத்தும்...

2025-03-15 02:46:42
news-image

பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் மட்டுமன்றி...

2025-03-15 02:41:59
news-image

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; ஒருவர்...

2025-03-15 02:34:53