கொழும்பு, நாரஹென்பிட்டி பிரதேசத்தில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றின் கதவை உடைத்து, உள்நுழைந்து 40 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களைத் திருடிச் சென்ற சம்பவம் தொடர்பில் இளைஞனும் யுவதியும் கைது செய்யப்பட்டுள்ளதாக நாரஹென்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
திருடியதாகக் கூறப்படும் 40 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை தன்வசம் வைத்திருந்ததாக கூறப்படும் 17 வயதுடைய யுவதியே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞன் மற்றுமொரு இளைஞனுடன் இணைந்து குறித்த விற்பனை நிலையத்தின் கதவை உடைத்து உள்நுழைந்து 40 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களைத் திருடியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், திருடிய பொருட்களை விற்பனை செய்வதற்கு தயாராக இருந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாரஹென்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM